best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, October 3, 2010

ஸ்ரீ கோரக்கர் சித்தர்

கோரக்க மகரிஷி பாடல்




விந்து நிலை விமலைஅவள் பீடம் உச்சி
வெட்டாத சக்கரம்தான் கோசம் கோசம்
அந்தமுடன் இறைக்காத சலமே நாதம்
அன்புடனே பேசாத மந்திரம் சேர்க்கை
சுந்தரமாய் எட்டாத புஷ்பம் வாசி
சுகமுடனே கட்டாத லிங்கம் சுக்கிலம்
பந்தமறும் பரமனைய ஆன்ம சோதி
பகர்குருவப் பூசயுட்ரா ணுவங்கள் போமே 
 
 
இதில் இருந்து நாம் கற்க வேண்டியது ,



1 .

மெளனமாக சுக்கிலத்தை விரயம் செய்யாமல் வாசி மூலமாக குருவை ( குரு = இறைவன்  , அல்லது சிவன் ) பூசை ( பூரணத்துடன் முழுமையாக சஞ்சரிப்பது , இரண்டற கலப்பது )செய்யவேண்டும், செய்தால்  பத்தாம் வாசலை திறந்து அவன் காட்சியைகாணலாம்.


2 .

சிறிது சிந்தித்தோமானால் , கோரக்க சித்தரின் ( சதுரகிரிக்கும் இவருக்கும் நிறைய தொடர்பு உள்ளது ) காலமே வேறு , பட்டினத்தார் காலமே வேறு , பட்டினத்து அடிகளார் நமக்கு நம் காலத்திற்கு வெகு அருகாமை இல் வாழ்ந்தவர் , அவருக்கு கோரக்க சித்தர் குரு மற்றும் வழி காட்டி என்றால் அவர் கண்டிப்பாக அவருக்கு நேரில் உபதேசம் செய்திருக்க வேண்டும் , எப்பொழுதெல்லாம் அவருக்கு யோக ஞான முறைகளில் தடையோ அல்லது பிரச்சனை வருகிறதோ அப்பொழுதெல்லாம் அவருக்கு நிவர்த்தி செய்திருக்க வேண்டும் , மேலும் அவர் வாழ்க்கை வரலாற்றில் வரும் இரு அதிசய நபர்கள் கோரக்க மகாரிஷியாகவே இருந்திருக்க வேண்டும் .









1 Comment:

  1. அடியேன்S.வீரமனிகண்ணன் said...
    !!! நன்றி !!!

Post a Comment



TIME