tag:blogger.com,1999:blog-82937623919272373212024-03-13T12:26:03.033-07:00சித்தர்கள் உலகம் அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.comBlogger219125tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-90924124015286155762011-08-31T03:28:00.001-07:002011-08-31T03:28:57.554-07:00காமத் தீயால் சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">"காடேரி மலையேறி நதிகளாடி<br />
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்<br />
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி<br />
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "<br />
<span class="text_exposed_show"><br />
பொழிப்பு:<br />
சித்தர்களாக, ரிஷிகளாக, குருமார்களாக பலரும் வேடமிட்டு, காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று, நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல் மாண்டவர் பலரே எனவும் அவர்களிடையே ஞானம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலரே எனவும் உரோமரிஷி ஞானம் சொல்கிறது.<br />
<br />
<br />
ஆசான் உரோமரிஷி:<br />
<br />
அட்டமாசித்தி பெற்ற பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடர் என்றும் குமாரர் என்றும் கூறுவர். உரோம ரிஷிக்கு உடல் முழுவதும் மயிர் முளைத்திருந்தபடியால் ‘உரோம முனி’ என்று காரணப் பெயர் பெற்றார்.<br />
<br />
ஒரு பிரம்மா இறந்தால் இவரது மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மா இறந்தால் மட்டுமே இவரது வாழ்நாள் முடிவுக்கு வரும். உரோம முனி இறந்தால் அஷ்டகோண முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்பர்.<br />
<br />
காலாங்கியும் போகரும் சீனாவிலிருந்து தமிழகம் வந்து சித்தர்களானது போல ரோம ரிஷியும் ரோம புரியிலிருந்து வந்த சித்தராயிருக்கலாம். உரோம ரிஷி என்ற பெயர் ரோமாபுரியுடன் தொடர்புடையது என்பர் சிலர்.<br />
<br />
தன்னைப்பற்றி:<br />
<br />
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்<br />
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி<br />
ஞால வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்<br />
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "<br />
<br />
பால் : யோக நிலையில் இருக்கும் போது நாம் சிரசில் ஒழுகும் அமிழ்தம் ; ஞால : பரிசுத்த மெய்ஞஞானம் ; பதம் : பாதம்.<br />
<br />
தியானம்:<br />
<br />
"செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!<br />
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;<br />
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;<br />
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;<br />
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது<br />
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;<br />
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி<br />
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே."<br />
<br />
<br />
போலிக்குரு:<br />
<br />
"மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி<br />
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து<br />
வீடேதிங் குடலேது யோக மேது<br />
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?<br />
காடேறி மலையேறி நதிக ளாடிக்<br />
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்<br />
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி<br />
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே"<br />
<br />
தவநிலை:<br />
<br />
"சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்<br />
சுடர்போலக் காணுமடா தூல தேகம்;<br />
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்<br />
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்<br />
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்<br />
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்<br />
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல<br />
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே"<br />
<br />
என உரோமரிஷி ஞானம் கூறுகிறது.<br />
<br />
இவர் சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம், வகார சூத்திரம், உரோமரிஷி முப்பு சூத்திரம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.<br />
<br />
இவர் அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயத்திற்கும் சிலேடைகளுக்கும் பஞ்சமே இல்லை.<br />
<br />
எண்சீர் விருத்தம்<br />
<br />
மூலவட்ட மானகுரு பாதங் காப்பு; <br />
முத்திக்கு வித்தான முதலே காப்பு; <br />
மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு! <br />
வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு;<br />
<br />
காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக் <br />
கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி <br />
ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம் <br />
நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. 1 <br />
<br />
கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே <br />
கருவதனை யறியாமல் மாண்டு போனான் <br />
விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம் <br />
வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்; <br />
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால் <br />
ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும் <br />
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால் <br />
பேரின்ப முத்திவழி பேசுவேனே. 2 <br />
<br />
பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்; <br />
பின்கலைதா னாதித்தனாதி யாச்சு; <br />
நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி <br />
நீங்காம லொன்றானா லதுதான் முத்தி; <br />
காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்; <br />
காணாத பேர்க்கென்ன காம தேகஞ் <br />
சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச் <br />
சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. 3 <br />
<br />
வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி <br />
வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை? <br />
ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி; <br />
உற்றபர மடிதானே பதினாறாகும்; <br />
தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு; <br />
சார்வான பதினாறில் மௌ¢ள வாங்கி <br />
ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி <br />
எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. 4 <br />
<br />
பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு <br />
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை; <br />
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து <br />
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு; <br />
<br />
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால் <br />
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா! <br />
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன் <br />
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே. 5 <br />
<br />
அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே! <br />
ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்; <br />
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான் <br />
பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு; <br />
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால் <br />
உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை; <br />
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு <br />
மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே. 6 <br />
<br />
மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும் <br />
வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று <br />
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று <br />
நலமான அட்டாங்க மப்பிய சித்துக் <br />
காலென்னப் பிராணாய முன்னே செய்யில் <br />
கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு <br />
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று <br />
குறையாமற் சரபீங் கூட்டித் தீரே. 7 <br />
<br />
கூட்டியே பழகினபின் சரபீ சத்தில் <br />
குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் <br />
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே <br />
கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு; <br />
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே <br />
மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன் <br />
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந் <br />
தணலான ருத்திரனுந் தணலு மாமே. 8 <br />
<br />
தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ் <br />
சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்; <br />
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க <br />
மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும் <br />
<br />
கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு; <br />
காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான் <br />
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம் <br />
பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே? 9 <br />
<br />
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா! <br />
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்; <br />
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு; <br />
மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு; <br />
சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது <br />
சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு; <br />
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி <br />
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே. 10 <br />
<br />
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி <br />
முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து <br />
வீடேதிங் குடலேது யோக மேது <br />
வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்? <br />
காடேறி மலையேறி நதிக ளாடிக் <br />
காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால் <br />
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி <br />
சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே. 11 <br />
<br />
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால் <br />
சுடர்போலக் காணுமடா தூல தேகம்; <br />
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம் <br />
அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான் <br />
பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின் <br />
பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால் <br />
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல <br />
வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே. 12 <br />
<br />
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே; <br />
உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே; <br />
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ <br />
டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப் <br />
போமென்று போனதனால் நாள்கு றைந்து <br />
போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை; <br />
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று <br />
தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே? 13</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-20973770274079534762011-08-31T03:25:00.000-07:002011-08-31T03:25:15.332-07:00“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது<br />
அற்றது போற்றி உணின்.” - (குறள் 942 - அதிகாரம் - 95)<br />
<span class="text_exposed_show"><br />
உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்களுக்கும் எந்நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.<br />
<br />
மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்யன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார். இது ஒரு மருத்துவப் பெட்டகம் நிறைந்த அதிகாரமாகும்.<br />
<br />
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது<br />
அற்றது போற்றி உணின்.”<br />
<br />
தான் முன்பு உண்ட உணவு செரித்துவிட்டது என்பதை அறிந்து அடுத்தவேளை உண்பானேயானால் அவனுக்கு மருந்து என்ற ஒன்று தேவையில்லை என்பதே வள்ளுவர் நமக்கு அருளிய இந்த திருக்குறளின் பொருள்.<br />
<br />
“பசித்துப் புசி” என்பது சான்றோர் வாக்கு<br />
<br />
பசித்த பின்பே உணவருந்த வேண்டும். பசியாமல் உண்பது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். அஜீரணத்தால் உடல் இயக்கம் தடைபடும். இது பல நோய்கள் உருவாக காரணமாகிறது.<br />
<br />
பஞ்சுப் பொதியல்ல நம் வயிறு. வயிறு முட்ட சாப்பிடுவது நல்லதல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர். மீதி கால் வயிறு காற்றோட்டத்திற்கு. இப்படி இருந்தால் மட்டுமே சிறப்பு.<br />
<br />
மூன்று வேளை கண்டிப்பாக சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர். வயிறு செரிமானமாகாமல் இருப்பின் அடுத்த வேளை உணவை தவிர்த்து விடலாம். அதுவும் இரவு உணவு உண்பதில் எச்சரிக்கை வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவு உணவில் மாமிசத்தைத் தவிர்ப்பது நல்லது.<br />
<br />
உலக மக்கள் இருவகை எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். <br />
<br />
ஒன்று உயிர் வாழ்வதற்காக உண்பவர்கள். இரண்டாம் வகையினர் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள். இந்த இரண்டாம் வகையினர் சாப்பாட்டுப் பிரியர்கள். இவர்கள் எப்போதும் எதாவது ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். <br />
<br />
தினமும் விருந்தும், கேளிக்கையுமாக உள்ளவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே குறுக்கிக் கொள்கிறார்கள். <br />
<br />
உணவு உண்பதில் ஒரு வரைமுறை வேண்டும். ஒரு கட்டுப்பாடு வேண்டும். கால இடைவெளி வேண்டும்.<br />
<br />
“ஒருவேளை உண்பான் யோகி<br />
<br />
இருவேளை உண்பான் போகி<br />
<br />
முப்போதும் உண்பான் ரோகி<br />
<br />
எப்போதும் உண்பான் துரோகி”<br />
<br />
இப்பாட்டிலிருந்து நாம் அறிவது என்ன-<br />
<br />
எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே ஒருவன் இருப்பானேயானால் அவன் தனக்குத்தானே துரோகம் செய்துகொள்கிறான். எப்போதும் எதையாவது உண்டு கொண்டே இருந்தால் வயிறு ஒரு அரவை இயந்திரமாகிப் போகிறது. அதன்பின் அதற்கு ஓய்வில்லாமல் போகிறது. இது வயிற்றில் சுரக்க வேண்டிய சுரப்பி நீர்களை அதிகமாகவோ, குறைவாகவோ நேரம் கெட்ட நேரத்தில் சுரக்க வைக்கிறது. <br />
<br />
இதனால் நமக்கு தேவையில்லாத அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இது பல நோய்கள் உருவாக அடித்தளமாகிறது. அதனால் எவன் ஒருவன் தான் உண்ட உணவு செரிமானமாகிவிட்டது என்பதை உணர்ந்து சாப்பிடுகிறானோ அவனை எந்த நோயும் அணுகாது. மருந்துகளும் அவன் உடலுக்குத் தேவையில்லை. இதனை நம் திருவள்ளுவர் காலத்திலேயே எடுத்துத்துரைத்திருந்தாலும் நாம் இதுவரை உணரவில்லை. இனியாவது இதனை பின்பற்றுவோமாக.</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-33342515634541913312011-08-31T03:21:00.000-07:002011-08-31T03:21:34.713-07:00"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-CRt4R0w-auE/Tl4KR37T9FI/AAAAAAAAAow/5J7Q9q7MeRo/s1600/logo.jpg.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="396" src="http://3.bp.blogspot.com/-CRt4R0w-auE/Tl4KR37T9FI/AAAAAAAAAow/5J7Q9q7MeRo/s400/logo.jpg.gif" width="400" /></a></div><br />
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.<br />
<br />
உணவில் தினமும் மிளகு இரசம் இடம<span class="text_exposed_show">்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.<br />
<br />
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.<br />
<br />
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.<br />
<br />
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.<br />
<br />
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.<br />
<br />
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.<br />
<br />
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.<br />
<br />
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.<br />
<br />
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.<br />
<br />
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.<br />
<br />
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.</span></span></span></h6><br />
</div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-51780828431360499142011-08-31T03:14:00.000-07:002011-08-31T03:14:53.564-07:00“தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்”<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">சித்தர் என்ற வார்த்தை சித்தியில் இருந்து வந்தது. ஆன்மீகத்திலும், அறிவியல் சாதனைகளிலும் முழுமை பெற்ற நிலை தான் சித்தி. சித்தி பெற்றவர் சித்தர். “தத்துவங்கள் முப்பத்து ஆறும் தாண்டியவர்கள் சித்தர்” என்பார் திருமூலர்.<br />
<br />
சித்தர்களை “அறிவன்” என்றும் “நிறைமொழி மாந்தர்” என்றும் குறிப்பிடும் தொல்காப்பியம்.<br />
<br />
”அவிர்சடை முனிவர்”என்கிறது புறநானூறு.<br />
<span class="text_exposed_show"><br />
அழியக்கூடிய உடம்பின் அசுத்தமான மூலகங்களை இரசவாதத்தின் மூலம் தூய்மைப்படுத்திக் கொண்டவர்கள் சித்தர்கள்.பொருளை சக்தியாக்குகிற வித்தை. அதன் மூலம் சுத்த தேகம் பெற்றனர். மீண்டும் அதனை மாற்றி பிரணவ தேகம் ஆக்கினர். அதனுடைய அடுத்த கட்டம் உருமாற்றும் ஞான வடிவு.<br />
<br />
சித்தர்களின் தேகம் நுட்பத்திலும் அதி நுட்பம், கடினத்துவத்திலும் அப்படித்தான்.அவர்கள் தங்கள் மனம் போல் உருமாறுவர். நோய்களூக்கும் மரணத்திற்கும் அப்பாற்பட்டது அவர்களுடைய அமைப்பு.மரணத்தை வெல்வது சித்தர் பண்பாடு.<br />
<br />
சித்தர்களிடம் அனுபவம்,ஆற்றல் எல்லாவற்றுக்கும் மேலாக இறையருள் இருந்தது.உயர்ந்த சிந்தனை உடையவர்கள் அவர்கள்.எளிய வாழ்க்கை முறை அவர்களுடையது.அதனால்தான் அவர்களூடைய வாக்கு பலித்தது.காரிய சித்தியில் அவர்களால் பெரும் புகழ் பெற முடிந்தது.<br />
<br />
சித்தர்களின் வலிமை தூய்மையின் வலிமை. அவர்களின் மன உறுதி ஒருமுகப்பட்டது. வார்த்தைகள் சக்தி மிக்கவை.சித்தர்கள் இன்றும் நம்மிடையே இல்லாமல் இல்லை.நாம்தான் அவர்களை புரிந்து கொள்ள தவறி விடுகிறோம். பார்த்தால பிச்சைகாரர்கள் போலவும் பித்தர்கள் போலவும் தோற்றமளித்தாலும்-அவர்கள் தேகத்தில் தனி தேஜஸ் கண்களில் சக்தி(காந்தம்) ஒளி தெரியும். தேகத்தில் நறுமண வாடை மிதக்கும்.அவர்களை உணர்ந்து கொள்ள இறையருள் வேண்டும். அவர்களை தரிசிக்கவும்,உணரவும் பாக்கியம் செய்திருந்தால் தான் அது வாய்க்கும்.<br />
<br />
நன்றி: ஞானபூமி</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-10954763119791774272011-08-31T03:11:00.001-07:002011-08-31T03:11:38.162-07:0096 தத்துவங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.<br />
<br />
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.<br />
<br />
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)<br />
<span class="text_exposed_show"><br />
" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்<br />
<br />
அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.<br />
<br />
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:<br />
<br />
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.<br />
<br />
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-32870698777456565192011-08-31T03:07:00.000-07:002011-08-31T03:07:34.290-07:00நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-to_L8tQsjq8/TN1vJlyts8I/AAAAAAAAAYM/8jq_hEzaqZo/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-to_L8tQsjq8/TN1vJlyts8I/AAAAAAAAAYM/8jq_hEzaqZo/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" /></a></div><br />
<br />
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: "Courier New",Courier,monospace;"><span style="font-size: small;"><span class="messageBody" data-ft="{"type":3}">ஒருமுறை தேரையர் அகத்தியரிடம், குருவே! மனிதன் ஏன் பிறக்கிறான்? அவன் இந்த உலகத்தை தன்னுடையதாகக் கருதி, இங்கேயே தங்க விரும்புகிறானே? மரணம் கண்டு அவன் அஞ்சுவது எதனால்? முக்திநிலை அடைவது தானே வாழ்வின் நோக்கம். பிறப்பற்ற நிலை பெற, நீங்கள் தான் உபதேசிக்க வேண்டும், என்றார். அகத்தியர் சிரித்தார். தேரையர் சற்றும் எதிர்பாராத ஒரு பதிலை அளித்தார். சீடனே! உடம்பை பாதுகாத்துக் கொள். உடம்பை பாதுகாத்தால் உனது ஆயுள்<span class="text_exposed_show"> பெருகும். ஆயுள் பெருகப் பெருக உனக்கு முக்தி கிடைத்து விடும், என்றார்.சுவாமி! தங்கள் பதில் விந்தையாக இருக்கிறதே! இந்த உடம்பை விடுத்து, விரைவில் வந்த இடம் போய் சேர்வது தான் முக்தி தத்துவம். தாங்களோ, ஆயுள் அதிகரித்தால் முக்தி கிடைக்கும் என்கிறீர்களே! இதெப்படி சாத்தியம்? என்றார். சீடனே! ஒரு கேள்விக்கு பதில் சொல், என்றார் அகத்தியர்.தேரையர் ஆவலுடன் அவர் முகத்தை நோக்கினார். நீ பல திருமணங்களைப் பார்த்திருப்பாய். மணமக்களை விருந்தினர்கள் என்ன சொல்லி வாழ்த்துகின்றனர்? என்றார். நீடூழி வாழ்க, என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள்? உன் கூற்றின்படி பார்த்தால், விரைவில் முக்தி அடைக என்றல்லவா வாழ்த்த வேண்டும்! மகனே! ஆயுள் வளர்வது வீணே பொழுது போக்குவதற்காக அல்ல. ஆண்டவனால் நிர்ணயிக்கப்படும் வாழ்நாளை ஆண், பெண் இருபாலரும், பிறர் நன்மை பெறுவதற்காகப் பயன்படுத்த வேண்டும். நம்மைப் போன்ற துறவிகளும் இதையே செய்ய வேண்டும். மேலும், ஞானத்தைப் பெற கடும் ஆன்மிகப்பயிற்சிகள் தேவை. இந்த பயிற்சியைப் பெற உடல் வலுவாக இருக்க வேண்டும். மொத்தத்தில் நோயற்ற உடல் வேண்டும். எனவே, நீ எல்லோருக்கும் நோயற்ற உடல் அமையும் வகையில், சேவை செய். நீ ஞானம் பெற்று, முக்தி பெறுவாய், என்றார்</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-45101166273273270852011-08-31T02:59:00.001-07:002011-08-31T03:01:34.314-07:0048 வகைச் சித்தர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}" style="font-family: Verdana,sans-serif;"><span style="font-size: x-small;"><span class="messageBody" data-ft="{"type":3}">1. பதினெட்டாம்படிக் கருப்புகள்<br />
2. நவகோடி சித்தர்கள்<br />
3. நவநாத சித்தர்கள்<br />
4. நாத சித்தர்கள்<br />
<span class="text_exposed_show">5. நாதாந்த சித்தர்கள்<br />
6. வேத சித்தர்கள்<br />
7. வேதாந்த சித்தர்கள்<br />
8. சித்த சித்தர்கள்<br />
9. சித்தாந்த சித்தர்கள்<br />
10. தவ சித்தர்கள்<br />
11. வேள்விச் சித்தர்கள்<br />
12. ஞான சித்தர்கள்<br />
13. மறைச் சித்தர்கள்<br />
14. முறைச் சித்தர்கள்<br />
15. நெறிச் சித்தர்கள்<br />
16. மந்திரச் சித்தர்கள்<br />
17. எந்திரச் சித்தர்கள்<br />
18. மந்தரச் சித்தர்கள்<br />
19. மாந்தரச் சித்தர்கள்<br />
20. மாந்தரீகச் சித்தர்கள்<br />
21. தந்தரச் சித்தர்கள்<br />
22. தாந்தரச் சித்தர்கள்<br />
23. தாந்தரீகச் சித்தர்கள்<br />
24. நான்மறைச் சித்தர்கள்<br />
25. நான்முறைச் சித்தர்கள்<br />
26. நானெறிச் சித்தர்கள்<br />
27. நான்வேதச் சித்தர்கள்<br />
28. பத்த சித்தர்கள்<br />
29. பத்தாந்த சித்தர்கள்<br />
30. போத்த சித்தர்கள்<br />
31. போத்தாந்த சித்தர்கள்<br />
32. புத்த சித்தர்கள்<br />
33. புத்தாந்த சித்தர்கள்<br />
34. முத்த சித்தர்கள்<br />
35. முத்தாந்த சித்தர்கள்<br />
36. சீவன்முத்த சித்தர்கள்<br />
37. சீவன்முத்தாந்த சித்தர்கள்<br />
38. அருவ சித்தர்கள்<br />
39. அருவுருவ சித்தர்கள்<br />
40. உருவ சித்தர்கள்<br />
<br />
பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.<br />
“எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)”<br />
“எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்”<br />
“ஏதமில் நிறை சித்தர் எழுவர்”<br />
“விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்”<br />
என்று பல குறிப்புகள் உள்ளன.</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-66543329891613816672011-08-31T02:57:00.000-07:002011-08-31T02:57:03.146-07:00பிறப்பால் எவரும் அந்தணர் ஆகமுடியாது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-hnTv7s0tlB4/TN1zisth57I/AAAAAAAAAYQ/GcfBx-zJRhw/s1600/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="http://3.bp.blogspot.com/-hnTv7s0tlB4/TN1zisth57I/AAAAAAAAAYQ/GcfBx-zJRhw/s400/%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg" width="355" /></a></div><br />
<br />
<h6 class="uiStreamMessage" data-ft="{"type":1}"><span style="font-size: x-small;"><span class="messageBody" data-ft="{"type":3}">பிறப்பால் எவரும் அந்தணர் ஆகமுடியாது. வாழ்வில் அறவழியில் நின்று இறைநிலை அடைபவர்களே அந்தணர்கள்.<br />
<br />
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்<br />
பிறவாழி நீந்தல் அரிது."<br />
<br />
<span class="text_exposed_show">தமிழச்சித்தர்கள் அனைவரும் அறவழி நின்று பிறப்பு, இறப்பாகிய பெருங்கடலை நீந்தி பிறப்பு, இறப்பாகிய ஊழின் தொடர்ச்சியை வென்றவர்கள். சித்தபெருமான் திருவள்ளுவரும் அந்தணரே. அவர் தாள் சேர்ந்தால் பிறப்பு, இறப்பை வெல்லும் அறிவைப் பெறலாம். திருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.<br />
<br />
அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்<br />
<br />
1. ஞானவெட்டியான் - 1500<br />
2. திருக்குறள் - 1330<br />
3. ரத்தினசிந்தாமணி - 800<br />
4. பஞ்சரத்தனம் - 500<br />
5. கற்பம் - 300<br />
6. நாதாந்த சாரம் - 100<br />
7. நாதாந்த திறவுகோல - 100<br />
8. வைத்திய சூத்திரம் - 100<br />
9. கற்ப குருநூல் - 50<br />
10. முப்பு சூத்திரம் - 30<br />
11. வாத சூத்திரம் - 16<br />
12. முப்புக்குரு - 11<br />
13. கவுன மணி - 100<br />
14. ஏணி ஏற்றம் - 100<br />
15. குருநூல் - 51<br />
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)</span></span></span></h6></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-2957981953767544692011-08-03T06:14:00.000-07:002011-08-03T06:14:26.888-07:00குகை நமச்சிவாயர் குரு நமச்சிவாயர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://1.bp.blogspot.com/-4AHHKOcQNZ8/TjlJabQhOtI/AAAAAAAAAoo/UQXxKE7bAO8/s1600/GUGAI+NAMACHIVAYAR.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="http://1.bp.blogspot.com/-4AHHKOcQNZ8/TjlJabQhOtI/AAAAAAAAAoo/UQXxKE7bAO8/s640/GUGAI+NAMACHIVAYAR.jpg" width="408" /> </a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><span style="color: #660000;">நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை....</span><br />
<br />
<span style="color: #660000;">அண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.</span><br />
<br />
<br />
<span style="color: #660000;">பெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.</span><br />
<br />
<span style="color: #660000;">அடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.</span><br />
<br />
<span style="color: #660000;">அவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்.</span><br />
<br />
<span style="color: #660000;">"குளுக்"</span><br />
<span style="color: #660000;">ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்.</span><br />
<br />
<span style="color: #660000;">"என்னப்பா அவ்வளவு சிரிப்பு? அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா?" என்றார் குகை நமச்சிவாயர்.</span><br />
<br />
<span style="color: #660000;">"குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் " என்றார்.</span><br />
<br />
<span style="color: #660000;">குகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.</span><br />
<br />
<span style="color: #660000;">சில நாட்கள் சென்றன...</span><br />
<br />
<span style="color: #660000;">குகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.</span><br />
<br />
<span style="color: #660000;">திடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.</span><br />
<br />
<span style="color: #660000;">சிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்.</span><br />
<br />
<span style="color: #660000;">"சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்" என்றார்.</span><br />
<br />
<span style="color: #660000;">சிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.</span><br />
<br />
<span style="color: #660000;">சிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து "இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா" என பணிந்தார்.</span><br />
<br />
<span style="color: #660000;">சிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா? என கேட்டார்.</span><br />
<br />
<span style="color: #660000;">"ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்" என்றான் சிஷ்யன்.</span><br />
<br />
<span style="color: #660000;">"எங்கு அதை போட்டாய்?" என்றார் குகை நமச்சிவாயர் </span><br />
<span style="color: #660000;">.</span><br />
<span style="color: #660000;">"குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.</span><br />
<br />
<span style="color: #660000;">தன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.</span><br />
<br />
<span style="color: #660000;">சிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் </span><span style="color: #660000; font-weight: bold;">குரு நமச்சிவாயர் </span><span style="color: #660000;">என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் </span><span style="color: #660000;">குகை நமச்சிவாயர் </span><br />
<br />
<span style="color: #660000;">----------------- ஓம்-------------------</span><br />
<span style="color: #660000;">கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக</span><br />
<span style="color: #660000;">உள்ள பொருளுடன் ஆவியுடன்ஈக </span><br />
<span style="color: #660000;">எள்ளத்தனையும் இடைவேடா தேநின்று</span><br />
<span style="color: #660000;">தெள்ளி யறியச் சிவபதந் தானே </span><br />
<span style="color: #660000;"> <span style="font-weight: bold;"> திருமந்திரம் - 1692</span></span><br />
<br />
<span style="color: #660000;">குருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.</span><br />
<br />
<span style="color: #660000;">குருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். </span><span style="color: #660000;">அதை</span><span style="color: #660000;"> </span><span style="color: #660000;">தவிர</span><span style="color: #660000;"> </span><span style="color: #660000;">வேறு</span><span style="color: #660000;"> </span><span style="color: #660000;">என்ன</span><span style="color: #660000;"> </span><span style="color: #660000;">வேண்டும்</span><span style="color: #660000;"> </span><span style="color: #660000;">இப்பிறவியில்</span><span style="color: #660000;">?</span><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><br />
</div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-90279561787480878142011-03-12T23:11:00.000-08:002011-03-12T23:11:12.287-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-oOFyOag7n-0/TPXnmY4w7dI/AAAAAAAAAYs/tJLDq6DBnDk/s1600/agasthiar_ambal_gnananadha1_001.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://lh3.googleusercontent.com/-oOFyOag7n-0/TPXnmY4w7dI/AAAAAAAAAYs/tJLDq6DBnDk/s400/agasthiar_ambal_gnananadha1_001.jpg" width="305" /></a></div><br />
<br />
<br />
<br />
<span style="font-size: small;"><b>திருமந்திரம்~334</b></span><br />
<span style="font-size: small;"><b></b></span><br />
<span style="font-size: small;"><b><br />
<br />
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்<br />
அங்கி உதயம்செய் மேல்பா லவனொடு<br />
மங்கி உதயம்செய் வடபால் தவமுனி<br />
எங்கும் வளம்கொள் இலங்கு ஒளி தானே.<br />
<br />
மூலாதாரத்தில் இருந்து எழுந்த நாதமானது அக்னி வடிவாய் சிரசின் முன் பக்கம் நிறுத்தும் சாதகனான அகஸ்தியன், அதை சிரசின் பின்பக்கம் விளங்க செய்து, பின் அது சிரசு முழுவதும் ஒளி வடிவாய் நிலை பெற செய்பவராம்.</b></span></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-89193014332620808302011-03-09T23:15:00.000-08:002011-03-09T23:15:50.753-08:00எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="font-size: small;"><b><a href="https://lh4.googleusercontent.com/-QJDbUkNWuTw/TMZjX9VyohI/AAAAAAAAAO4/E2U1UnXW8cQ/s1600/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-QJDbUkNWuTw/TMZjX9VyohI/AAAAAAAAAO4/E2U1UnXW8cQ/s400/%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF+%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpeg" width="320" /></a></b></span></div><span style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span style="font-size: small;"><b><br />
</b></span><br />
<span style="font-size: small;"><b>இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள். ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே. பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார். இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள். சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை. பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது. ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார். உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது. ‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார். ‘‘ஜோகிங்க சாமி...’’ ‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’ ‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’ ‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’ ‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’ ‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’ ‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’ ‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’ அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது. ‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி... அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது. ‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’ ‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’ அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின. ஜோகிக்கு வியப்பு தாளவில்லை. அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது. ‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’ ‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’ ‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான். சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான். குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார். ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே? பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று. ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார். உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.</b></span><br />
<span style="font-size: small;"><b>‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண ஈரைந்து மாதமாய் வைத்த சூளை அருமையாய் இருப்பினும் அந்த சூளை அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’</b></span><br />
<span style="font-size: small;"><b>_ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார். ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர். தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று. அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள். பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார். எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார். பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள். கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது. இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.</b></span></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-29315114138450478822011-03-09T22:39:00.000-08:002011-03-09T22:39:56.020-08:00"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-JOU_idPbNz8/TXhx3f-9QFI/AAAAAAAAAnQ/LU_RL2qPLFw/s1600/45.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://lh3.googleusercontent.com/-JOU_idPbNz8/TXhx3f-9QFI/AAAAAAAAAnQ/LU_RL2qPLFw/s400/45.jpg" width="400" /> </a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh3.googleusercontent.com/-k2erVe3Di9Y/TXhx4GFCtGI/AAAAAAAAAnU/FZMc7frRNT4/s1600/aum+rainbow.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="280" src="https://lh3.googleusercontent.com/-k2erVe3Di9Y/TXhx4GFCtGI/AAAAAAAAAnU/FZMc7frRNT4/s400/aum+rainbow.jpg" width="400" /> </a></div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh5.googleusercontent.com/-ap3N03pC3HA/TXhx6LboF8I/AAAAAAAAAnY/8FgmV4mFrik/s1600/Aum_Wallpaper.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="326" src="https://lh5.googleusercontent.com/-ap3N03pC3HA/TXhx6LboF8I/AAAAAAAAAnY/8FgmV4mFrik/s400/Aum_Wallpaper.jpg" width="400" /></a></div><br />
<br />
<br />
<br />
<span style="font-size: large;"><b>"ஓம்" என்னும் ப்ரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஸ்கிருத மொழியின் எழுத்துக்களான அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை, மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை, மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. 'அ' மற்றும் 'உ' எழுத்துக்கள் சேர்ந்து 'ஓ' என்று ஒலிக்கப்படுகிறது. <br />
<br />
முருகப்பெருமான் ப்ரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்டபோது, அறியாமல் விழித்தவரை சிறைக்கு அனுப்பி, "என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும். <br />
<br />
இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும்.<br />
<br />
ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம். ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாக்குகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்து இந்த ஓம்காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப்புலத்தை உண்டாக்குகிறது. நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும்பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய அந்த இயங்கு சக்தியைத்(சூஷ்ம சக்தி) தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின் சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூஷ்ம சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது. உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும்.<br />
<br />
இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத , காணவும் இயலாத ஒரு சூஷ்மமான அலைவரிசையில்தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூஷ்மமான பிணைப்பினை உருவாக்குகிறது. அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூஷ்மமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டுவிட்டால் அந்த பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும். <br />
<br />
இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது. அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கல்ல என்பது நமக்குத் தெரிய வரும்.<br />
<br />
இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாக பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்து வர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.<br />
<br />
இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு ஒரு இடத்திற்குச் சென்றுவிட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்!) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும்பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும். நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்!) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும்போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலைவரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாட்கள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.<br />
<br />
இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்து செய்யும்பொழுது அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது. வள்ளலார் கூறிய ஆன்மநேய ஒருமைப்பாடு வழிக்கும் இதுதான் மூலம். <br />
<br />
கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம்புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது. <br />
<br />
கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சாமி சன்னிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி. </b></span></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-9700832907442022162011-03-05T08:28:00.000-08:002011-03-05T08:30:07.286-08:00அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="color: black; font-size: small;">ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">எப்பிறப்பில் காண்பேன் இனி.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">எரியத் தழல் மூட்டுவேன்.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">மெய்யில் தீமூட்டு வேன்.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">மகனே என அழைத்த வய்க்கு.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">மகனே என அழைத்த வய்க்கு.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">விருத்தம்:</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">முன்னை இட்ட தீ முப்புரத்திலே</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">பின்னை இட்ட தீ தென் இலங்கையில்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வெண்பா:</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">கருதி வளர்த்தெடுத்த கை.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆனாள்- பால் தெளிக்க</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span><br />
<span style="color: black; font-size: small;">எல்லாம் சிவமயமே யாம்.</span><span style="font-size: small;"><br style="color: black;" /></span></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-74085577930737234592011-03-05T08:10:00.000-08:002011-03-05T08:20:37.214-08:00"பேய்போல் திரிந்து; பிணம்போல் கிடந்து; நாய்போல் அருந்தி; நரிபோல் உழன்று.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: red;"><b>"<span style="font-size: large;">பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்</span></b></div><div style="color: red;"><span style="font-size: large;"><b><br />
</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><b>நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><b><br />
</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><b>தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><b><br />
</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><b>சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!</b></span></div><div style="color: red;"><span style="font-size: large;"><br />
</span></div><div style="color: red;"><span style="font-size: large;"><br />
</span></div><div style="color: red;"><span style="font-size: large;"><br />
</span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>பேய்போல் திரிந்து</b> : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>பிணம்போல் கிடந்து</b> : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி</b> : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>நன்மங்கையரைத் தாய்போல் கருதி </b>: நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி</b> : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>சேய்போல் இருப்பர்கண்டீர்</b> : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,</b></span></div><div style="color: red; text-align: justify;"><span style="font-size: small;"><b><b>உண்மை ஞானம் தெளிந்தவரே</b> : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் சித்தன்</b><b style="color: red;"> என்கிறார் </b></span></div><b style="color: red;"><br />
</b><br />
<div style="color: red; text-align: justify;"><br />
</div></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-36302452525056842742011-03-03T06:23:00.000-08:002011-03-03T06:23:38.033-08:00Yoga Shree Vilvam Yoga - Veeramani<iframe src="http://www.youtube.com/embed/ZBnv4VegU9s?fs=1" allowfullscreen="" frameborder="0" height="295" width="480"></iframe>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-80388238070399431222011-02-26T01:24:00.001-08:002011-02-26T01:24:20.773-08:00பட்டினத்தார்-பாடல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b>பட்டினத்தார்-பாடல்கள்<br />
<br />
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து<br />
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்<br />
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்<br />
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1<br />
<br />
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,<br />
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்த பின்பு<br />
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்<br />
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 2<br />
<br />
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன<br />
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து<br />
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று<br />
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3<br />
<br />
நீறார்த்த மேனியும் ரோமஞ் சிலிர்த்து உளம் நெக்கு நெக்குச்<br />
சேறாய்க் கசிந்து கசிந்தே உருகி, நின் சீரடிக்கே<br />
மாறாத் தியான முற்று ஆனந்த மேற்கொண்டு மார்பிற் கண்ணீர்<br />
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5<br />
<br />
செல்வரைப் பின் சென்று சங்கடம் பேசித், தினந் தினமும்<br />
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்<br />
எல்லையிற் புக்கிட ஏகாந்தமாய் எனக்காம் இடத்தே<br />
அல்லல் அற்று என்றிருப்பேன் அத்தனே, கயிலாயத்தனே. 6<br />
<br />
வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன் வழிபோய்ப்<br />
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்<br />
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயல் ஐஞ்செழுத்தாம்<br />
அருந்தேன் அருந்துவன் நின் அருளால், கயிலாயத்தனே. 8<br />
<br />
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்து உருகி<br />
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும், நின் ஐஞ்செழுத்தைச்<br />
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்<br />
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9<br />
<br />
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற<br />
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்<br />
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே<br />
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13<br />
<br />
பிறக்கும் பொழுது கொடு வந்த தில்லை, பிறந்து மண்மேல்<br />
இறக்கும் பொழுது கொடு போவ தில்லை; இடை நடுவில்<br />
குறிக்கும் இச் செல்வஞ் சிவன் தந்த தென்று கொடுக்க அறியாது<br />
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7<br />
<br />
நல்லாய் எனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்<br />
பொல்லா எனைக் கொன்று போடும் பொழுதியல் பூசைசெபஞ்<br />
சொல்லா நற்கோயில் நியமம் பலவகைத் தோத்திரமும்<br />
எல்லா முடிந்தபின் கொல்லு கண்டாய் கச்சியேகம்பனே. 32<br />
<br />
நாறு முடலை, நரிப்பொதி சோற்றினை, நான் தினமுஞ்<br />
சோறுங் கறியும் நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்<br />
கூறும் மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில் விழாது<br />
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34<br />
<br />
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி<br />
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்<br />
சொல்லான் அலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்<br />
எல்லாம் சிவன் செயலே என்பார் காண் கச்சியேகம்பனே. 37<br />
<br />
பொன்னை நினைந்து வெகுவாகத் தேடுவர், பூவை அன்னாள்<br />
தன்னை நினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்<br />
உன்னை நினைந்திங் உனைப் பூசியாத உலுத்த ரெல்லாம்<br />
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38<br />
<br />
கொன்றேன் அனேக முயிரை எலாம் பின்பு கொன்று கொன்று<br />
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்க வென்றே<br />
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம் நீபொறுப்பாய்<br />
என்றே உனை நம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40<br />
<br />
ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள<br />
பேரிருந்தென்ன ? பெற்ற தாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்<br />
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்<br />
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41<br />
<br />
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்<br />
கல்லாமற் கைதவரோடு இணங்காமற் கனவினும் பொய்<br />
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் தோகையர் மாயையிலே<br />
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6<br />
<br />
முடிசார்ந்த மன்னரு மற்ற முள்ளோரு முடிவிலொரு<br />
பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங் கண்டு பின்னு இந்தப்<br />
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லாற் பொன்னினம்பலவ<br />
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டு மென்றே அறிவாரில்லையே. 7<br />
</b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-18305490426234198802011-02-26T01:23:00.000-08:002011-02-26T01:23:12.638-08:00நான்காவது கச்சித் திருவகவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b>நான்காவது கச்சித் திருவகவல்<br />
<br />
திருமால் பயந்த திசைமுக னமைத்து<br />
வருமேழ் பிறவியு மானுடத் துதித்து<br />
மலைமகள் கோமான் மலரடி யிறைஞ்சிக்<br />
குலவிய சிவபதங் குறுகா தவமே<br />
மாதரை மகிழ்ந்து காதற் கொண்டாடும் 5<br />
<br />
மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்;<br />
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்,<br />
முள்ளுங் கல்லு முயன்று நடக்கும்<br />
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்<br />
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10<br />
<br />
துள்ளும் வராலெனச் சொல்லித் துதித்தும்<br />
தசையு மெலும்புந் தக்ககன் குறங்கை<br />
இசையுங் கதலித் தண்டென வியம்பும்<br />
நெடுமுடல் தாங்கி நின்றிடு மிடையைத்<br />
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15<br />
<br />
மலமும் சலமும் வழும்புந் திரையும்<br />
அலையும் வயிற்றை யாலிலை யென்றும்<br />
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து<br />
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி<br />
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20<br />
<br />
நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்<br />
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்<br />
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்;<br />
நீட்டவு முடக்கவு நெடும்பொருள் வாங்கவும்<br />
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25<br />
<br />
அங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்<br />
வேர்வையு மழுக்கு மேவிய கழுத்தைப்<br />
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்<br />
வெப்பு மூத்தையு மேவிய வாயைத்<br />
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30<br />
<br />
அன்னமுங் கறியு மசைவிட் டிறக்கும்<br />
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்<br />
நீருஞ் சளியு நின்றுநின் றொழுகும்<br />
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்<br />
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35<br />
<br />
கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்<br />
உள்ளுங் குறும்பி யழுகுங் காதை<br />
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்<br />
கையு மெண்ணெயுங் கலவா தொழியில்<br />
வெய்ய வதரும் பேனும் விளையத் 40<br />
<br />
தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த<br />
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்<br />
சொற்பல பேசித் துதித்து நீங்கள்<br />
நச்சிச் செல்லு நரக வாயில்<br />
தோலு மிறைச்சியுந் துதைந்துசீப் பாயும் 45<br />
<br />
காமப் பாழி, கருவிளை கழனி<br />
தூமைக் கடவழி, தொளைபெறு வாயில்<br />
எண்சா ணுடம்பு மிழியும் பெருவழி,<br />
மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்,<br />
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50<br />
<br />
இச்சித் திருக்கு மிடைகழி வாயில்;<br />
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்<br />
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி<br />
புண்ணிது வென்று புடவையை மூடி<br />
உண்ணீர் பாயு மோசைச் செழும்புண், 55<br />
<br />
மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி;<br />
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி;<br />
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி<br />
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி<br />
பெண்ணு மாணும் பிறக்கும் பெருவழி 60<br />
<br />
மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே<br />
சலஞ்சொரிந் திழியுந் தண்ணீர் வாயில்<br />
இத்தை நீங்க ளினிதென வேண்டா<br />
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி<br />
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65<br />
<br />
முத்தி நாதனை மூவா முதல்வனை<br />
அண்ட ரண்டமு மனைத்துள புவனமும்<br />
கண்ட வண்ணலைக் கச்சியிற் கடவுளை<br />
ஏக நாதனை, இணையடி யிறைஞ்சுமின்<br />
போக மாதரைப் போற்றுத லொழிந்தே! 70<br />
<br />
திருச்செங்கோடு<br />
<br />
நெருப்பான மேனியர் செங்கோட்டி லாத்தி நிழலருகே<br />
இருப்பார் திருவுள மெப்படியோ இன்னமென்னை யன்னைக்<br />
கருப்ப சாயக்குழிக்கே தள்ளுமோ கண்ணன் காணரிய<br />
திருப்பாதமே தருமோ தெரியாது சிவன்செயலே.<br />
<br />
திருவொற்றியூர்<br />
<br />
ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து<br />
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்<br />
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்<br />
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 1<br />
<br />
சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்<br />
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்<br />
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு<br />
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 2<br />
<br />
திருவிடைமருதூர்<br />
<br />
காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி<br />
யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்<br />
நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்<br />
வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே. 1<br />
<br />
தாயும்பகை; கொண்ட பெண்டீர் பெரும்பகை; தன்னுடைய<br />
சேயும்பகை; யுறவோரும் பகை; யிச்செகமும் பகை;<br />
ஆயும் பொழுதி லருஞ்செல்வம் நீங்கில்! இக்காதலினாற்<br />
தோயுநெஞ்சே, மருதீசர் பொற்பாதஞ் சுதந்திரமே. 2<br />
<br />
திருக்கழுக்குன்றம்<br />
<br />
காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த<br />
நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த<br />
வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,<br />
நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.<br />
<br />
திருக்காளத்தி<br />
<br />
பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்துபட் டாடைசுற்றி,<br />
முத்தும் பவளமும் பூண்டோடி யாடி முடிந்தபின்பு<br />
செத்துக் கிடக்கும் பிணத்தரு கேயினிச் சாம்பிணங்கள்<br />
கத்துங் கணக்கெண்ன? காண்கயிலாபுரிக் காளத்தியே! 1<br />
<br />
பொன்னாற் பிரயோசனம் பொன்படைத் தார்க்குண்டு; பொன்படைத்தோன்<br />
தன்னாற் பிரயோசனம் பொன்னுக்கங் கேதுண்டு? அத்தன்மையைப்போ<br />
உன்னாற் பிரயோசனம் வேணதெல்லாம் உண்டுஉனைப் பணியும்<br />
என்னாற் பிரயோசன மேதுண்டு? காளத்தி யீச்சுரனே! 2<br />
<br />
வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன<br />
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து<br />
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று<br />
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே? 3<br />
<br />
முப்போது மன்னம் புசிக்கவுந் தூங்கவு மோகத்தினாற்<br />
செப்போ திளமுலை யாருடன் சேரவுஞ் சீவன்விடு<br />
மப்போது கண்கலக்கப் படவும் வைத்தா யையனே,<br />
எப்போது காணவல்லேன்? திருக்காளத்தி யீச்சுரனே. 4<br />
<br />
இரைக்கே யிரவும் பகலுந் திரிந்திங் கிளைத்துமின்னார்<br />
அரைக்கே யவலக் குழியரு கேயசும் பார்ந்தொழுகும்<br />
புரைக்கே யுழலுந் தமியேனை யாண்டருள், பொன்முகலிக்<br />
கரைக்கேகல் லால நிழற்கீ ழமர்ந்தருள் காளத்தியே. 5<br />
<br />
நாறுங் குதிரைச் சலதாரை தோற்புரை நாடொறுஞ்சீழ்<br />
ஊறு மலக்குழி காமத்துவார மொளித் திடும்புண்<br />
தேறுந் தசைப்பிளப் பந்தரங் கத்துள சிற்றின்பம்விட்டு<br />
ஏறும் பதந்தரு வாய் திருக்காளத்தி யீச்சுரனே. 6<br />
<br />
திருக்கைலாயம்<br />
<br />
கான்சாயும் வெள்ளி மலைக்கரசே, நின்கழல் நம்பினேன்<br />
ஊன்சாயுஞ் சென்ம மொழித்திடு வாய், காவூரனுக்காய்<br />
மான்சாயுச் செங்கை மழுவலஞ் சாய வனைந்தகொன்றைத்<br />
தேன்சாய நல்ல திருமேனி சாய்த்த சிவக்கொழுந்தே. 1<br />
<br />
இல்லந் துறந்து பசிவந்த போதங் கிரந்துநின்று<br />
பல்லுங் கரையற்று வெள்வாயுமாய், ஒன்றிற் பற்றுமின்றிச்<br />
சொல்லும் பொருளு மிழந்து சுகானந்தத் தூக்கத்திலே<br />
யல்லும் பகலு மிருப்பதென்றோ? கயிலா யத்தனே. 2<br />
<br />
சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று<br />
நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்<br />
தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற<br />
அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே. 3<br />
<br />
கையார ஏற்றுநின் றங்ஙனந் தின்று கரித்துணியைத்<br />
தையா துடுத்து நின் சந்நிதிக்கே வந்துசந்ததமு<br />
மெய்யார நிற்பணிந் துள்ளே யுரோமம் விதிர்விதிர்ப்ப<br />
ஐயா வென்று ஓலமிடுவது என்றோ? கயிலாயத்தனே. 4<br />
<br />
நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்<br />
சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே<br />
மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்<br />
ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே. 5<br />
<br />
செல்வரைப் பின்சென்று சங்கடம் பேசித், தினந்தினமும்<br />
பல்லினைக் காட்டிப் பரிதவியாமற் பரமானந்தத்தின்<br />
எல்லையிற் புக்கிட வேகாந்தமாய் எனக்காம் இடத்தே<br />
அல்லல் அற்று என்றிருப் பேனத்தனே, கயிலாயத்தனே. 6<br />
<br />
மந்திக் குருளையத் தேனில்லை, நாயேன் வழக்கறிந்துஞ்<br />
சிந்திக்குஞ் சிந்தையையான் என்செய்வேன் எனைத் தீதகற்றிப்<br />
புந்திப் பிரிவிற் குருளையை யேந்திய பூசையைப்போல்<br />
எந்தைக் குரியவன் காண் அத்தனே, கயிலாயத்தனே. 7<br />
<br />
வருந்தேன் பிறந்து மிறந்தும் மயக்கும் புலன்வழிபோய்ப்<br />
பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன், புகழ் வாரிடத்தில்<br />
இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன் இயலஞ்செழுத்தாம்<br />
அருந்தேன் அருந்துவ நின் அருளால், கயிலாயத்தனே. 8<br />
<br />
மதுரை<br />
<br />
விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்<br />
திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்<br />
கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்<br />
படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.<br />
<br />
பிணமெனப் படுத்தி யான் புறப்படும் பொழுது நின்<br />
அடிமலர்க் கமலத்துக் கபய நின் னடைக்கலம்<br />
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித் தெழுங்<br />
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்<br />
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45<br />
<br />
அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;<br />
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்<br />
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;<br />
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்<br />
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50<br />
<br />
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;<br />
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!<br />
<br />
திருச்சிற்றம்பலம்<br />
<br />
<br />
<br />
<br />
</b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-55442621618264014602011-02-26T01:21:00.000-08:002011-02-26T01:21:22.660-08:00பட்டினத்தார் திருவேகம்பவிருத்தம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b>திருவேகம்பவிருத்தம்<br />
<br />
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?<br />
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?<br />
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?<br />
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?<br />
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?<br />
மூடனாயடி யேனும றிந்திலேன்,<br />
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?<br />
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே?<br />
<br />
2. திருத்தில்லை<br />
காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்<br />
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்<br />
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்<br />
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்கரனே. 1<br />
<br />
சோறிடும்நாடு, துணிதருங் குப்பை தொண்டன்பரைக்கண்டு<br />
ஏறிடுங்கைகள் இறங்கிடுந் தீவினை, எப்பொழுதும்<br />
நீறிடும் மேனியர் சிற்றம்பலவர் நிருத்தம்கண்டால்<br />
ஊறிடுங் கண்கள் உருகிடும்நெஞ்சமென் னுள்ளமுமே. 2<br />
<br />
அழலுக்குள்வெண்ணெய் எனவே உருகிப் பொன்னம்பலத்தார்<br />
நிழலுக்குள் நின்றுதவம் உஞற்றாமல் நிட்டூரமின்னார்<br />
குழலுக்கிசைந்த வகைமாலை கொண்டு குற்றேவல்செய்து<br />
விழலுக்கு முத்துலை இட்டிறைத்தேனென் விதிவசமே. 3<br />
<br />
ஓடாமற் பாழுக்கு உழையாமல் ஓரமுரைப்பவர்பால்<br />
கூடாமல் நல்லவர்கூட்டம் விடாமல் வெங்கோபம்நெஞ்சில்<br />
நாடாமல் நன்மைவழுவாமல் இன்றைக்கு நாளைக்கென்று<br />
தேடாமல் செல்வந் தருவாய், சிதம்பரதேசிகனே. 4<br />
<br />
பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி<br />
வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து<br />
பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்<br />
சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே. 5<br />
<br />
கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங்கோள்கள்<br />
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவினும்பொய்<br />
சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர்மாயையிலே<br />
செல்லாமற் செல்வந் தருவாய், சிதம்பர தேசிகனே. 6<br />
<br />
முடிசார்ந்த மன்னரு மற்றமுள்ளோரு முடிவிலொரு<br />
பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவதுங் கண்டுபின்னுமிந்தப்<br />
பிடிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்னினம்பலவ<br />
ரடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்றே யறிவாரில்லையே. 7<br />
<br />
காலையுபாதி மலஞ்சல மாமன்றிக் கட்டுச்சியிற்<br />
சாலவுபாதி பசிதாக மாகுமுன் சஞ்சிதமாம்<br />
மாலையுபாதி துயில்காம மாமிவை மாற்றிவிட்டே<br />
ஆலமுகந்தரு ளம்பலவா, என்னை யாண்டருளே. 8<br />
<br />
ஆயும்புகழ்ந்தில்லை யம்பலவாண ரருகிற் சென்றாற்<br />
பாயுமிடபங், கடிக்குமரவம், பின்பற்றிச் சென்றாற்<br />
பேயுங்கணமும் பெருந்தலைப் பூதமும் பின்தொடரும்<br />
போயென்செய்வாய் மனமே ! பிணக்காடவர் போமிடமே. 9<br />
<br />
ஓடுமெடுத்தத ளாடையுஞ் சுற்றி, யுலாவிமெள்ள<br />
வீடுகடோறும் பலிவாங்கியே, விதி யற்றவர்போ<br />
லாடுமருட் கொண்டிங்கு அம்பலத்தேநிற்கு மாண்டிதன்னைத்<br />
தேடுங் கணக்கென்னகாண் ? சிவகாம சவுந்தரியே. 10<br />
<br />
ஊட்டுவிப்பானு முறங்குவிப்பானுமிங் கொன்றோ டொன்றை<br />
மூட்டுவிப்பானு முயங்குவிப்பானு முயன்ற வினை<br />
காட்டுவிப்பானு மிருவினைப் பாசக் கயிற்றின்வழி<br />
யாட்டுவிப்பானு மொருவனுண் டேதில்லை யம்பலத்தே. 11<br />
<br />
அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்<br />
மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த<br />
நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்<br />
குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே. 12<br />
<br />
தெய்வச் சிதம்பரதேவா, உன்சித்தந் திரும்பிவிட்டாற்<br />
பொய்வைத்த சொப்பனமா மன்னர்வாழ்வும் புவியுமெங்கே?<br />
மெய்வைத்த செல்வமெங்கே? மண்டலீகர்தம் மேடையெங்கே?<br />
கைவைத்த நாடகசாலையெங்கே? இது கண்மயக்கே. 13<br />
<br />
உடுப்பானும் பாலன்னமுண்பானு முய்வித்தொருவர் தம்மைக்<br />
கெடுப்பானு மேதென்று கேள்விசெய்வானுங் கெதியடங்கக்<br />
கொடுப்பானுந் தேகியென்றேற்பானும் ஏற்கக் கொடாமனின்று<br />
தடுப்பானு நீயல்லையோ? தில்லையானந்தத் தாண்டவனே. 14<br />
<br />
வித்தாரம் பேசினுஞ் சோங்கேறினுங் கம்பமீதிருந்து<br />
தத்தாரவென் றோதிப் பவுரிகொண்டாடினுந் தம்முன்தம்பி<br />
யத்தாசைபேசினு மாவதுண்டோ? தில்லையுண்ணிறைந்த<br />
கத்தாவின் சொற்படியல்லாது வேறில்லை கன்மங்களே. 15<br />
<br />
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா<br />
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ<br />
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல<br />
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே. 16<br />
<br />
தவியாதிரு நெஞ்சமே, தில்லைமேவிய சங்கரனைப்<br />
புவியார்ந் திருக்கின்ற ஞானாகரனைப் புராந்தகனை<br />
அவியாவிளக்கைப் பொன்னம்பலத் தாடியை யைந்தெழுந்தாற்<br />
செவியாமல் நீ£செபித்தாற் பிறவாமுத்தி சித்திக்குமே. 17<br />
<br />
நாலின் மறைப்பொரு ளம்பலவாணரை நம்பியவர்<br />
பாலிலொருதரஞ் சேவிக்கொணா திருப்பார்க் கருங்கல்<br />
மேலிலெடுத்தவர் கைவிலங்கைத் தைப்பர், மீண்டுமொரு<br />
காலினிறுத்துவர், கிட்டியுந் தாம்வந்து கட்டுவரே. 18<br />
<br />
ஆற்றோடு தும்பை யணிந்தாடும் அம்பலவாணர்தம்மைப்<br />
போற்றாதவர்க்கு அடையாளமுண் டேயிந்தப் பூதலத்திற்<br />
சோற்றாவி யற்றுச்சுகமற்றுச் சுற்றத் துணியுமற்றே<br />
ஏற்றாலும் பிச்சைகிடையாம லேக்கற் றிருப்பார்களே. 19<br />
<br />
அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை<br />
நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்<br />
கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்<br />
எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே. 20<br />
முதலாவது கோயிற்றிருவகவல்<br />
(திருமண்டில ஆசிரப்பா)<br />
நினைமின் மனனே! நினைமின் மனனே!<br />
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை<br />
நினைமின் மனனே! நினைமின் மனனே!<br />
அலகைத் தேரி னலமரு காலின்<br />
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க! 5<br />
<br />
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;<br />
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;<br />
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;<br />
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;<br />
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; 10<br />
<br />
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;<br />
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;<br />
என்றிவை யனைத்து முணர்ந்தனை, அன்றியும்<br />
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்<br />
கொன்றனை யனைத்தும், அனைத்துநினைக் கொன்றன, 15<br />
<br />
தின்றன யனைத்தும், அனைத்துநினைத் தின்றன;<br />
பெற்றன யனைத்தும், அனைத்துநினைப் பெற்றன;<br />
ஓம்பினை யனைத்தும், அனைத்துநினை யோம்பின;<br />
செல்வத்துக் களித்தனை, தரித்திரத் தழுகினை;<br />
சுவர்க்கத் திருந்தினை, நரகிற் கிடந்தனை, 20<br />
<br />
இன்பமும் துன்பமும் இருநிலத் தருந்தினை;<br />
ஒன்றென் றெழியா துற்றனை, அன்றியும்;<br />
புற்பதக் குரம்பைத் துச்சி லொதுக்கிடம்<br />
என்ன நின்றியங்கு மிருவினைக் கூட்டைக்<br />
கல்லினும் வலிதாக் கருதினை, இதனுள், 25<br />
<br />
பீளையு நீரும் புலப்படு மொருபொறி;<br />
மீளுங் குறும்பி வெளிப்படு மொருபொறி;<br />
சளியு நீருந் தவழு மொருபொறி;<br />
உமிழ்நீர் கோழை யழுகு மொறிபொறி;<br />
வளியு மலமும் வழங்கு மொருவழி 30<br />
<br />
சலமுஞ் சீயுஞ் சரியு மொருவழி;<br />
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்<br />
சட்டக முடிவிற் சுட்டெலும் பாகும்<br />
உடலுறு வாழ்க்கையை யுள்ளுறத் தேர்ந்து,<br />
கடிமலர்க் கொன்றைச், சடைமுடிக் கடவுளை 35<br />
<br />
ஒழிவருஞ் சிவபெரும் போகவின் பத்தை;<br />
நிழலெனக் கடவா நீர்மையடு பொருந்தி,<br />
எனதற நினைவற இருவனை மலமற<br />
வரவொடு செலவற மருளற இருளற<br />
இரவொடு பகலற இகபர மறஒரு 40<br />
<br />
முதல்வனைத் தில்லையுண் முளைத்தெழுஞ் சோதியை<br />
அம்பலத் தரசனை, ஆனந்தக் கூத்தனை,<br />
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குருகித்<br />
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சிவனை<br />
நினைமின் மனனே! நினைமின் மனனே! 45<br />
<br />
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,<br />
நினைமின் மனனே! நினைமின் மனனே!<br />
இரண்டாவது கோயிற்றிருவகவல்<br />
காதள வோடிய கலகப் பாதகக்<br />
கன்னியர் மருங்கிற் புண்ணுட னாடுங்<br />
காதலுங் கருத்து மல்லால்நின் னிருதாள்<br />
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்<br />
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5<br />
<br />
தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்<br />
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்;<br />
சலமலப் பேழை; யிருவினைப் பெட்டகம்;<br />
வாதபித் தங்கோழை குடிபுகுஞ் சீறூர்;<br />
ஊத்தைப் புன்தோ லுதிரக் கட்டளை; 10<br />
<br />
நாற்றப் பாண்டம், நான்முழத் தொன்பது<br />
பீற்றத் துண்டம், பேய்ச்சுரைத் தோட்டம்<br />
அடலைப் பெரிய சுடலைத் திடருள்,<br />
ஆசைக் கயிற்றி லாடும் பம்பரம்<br />
ஓயா நோய்க்கிடம், ஓரு மரக்கலம்; 15<br />
<br />
மாயா விகாரம், மரணப் பஞ்சரம்;<br />
சோற்றுத் துருத்தி, தூற்றம் பத்தம்;<br />
காற்றில் பறக்கும் காணப் பட்டம்;<br />
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை,<br />
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20<br />
<br />
ஈமக் கனலி லிடுசில விருந்து;<br />
காமக் கனலிற் கருகுஞ் சருகு;<br />
கிருமிக் கிண்டுங் கிழங்கஞ் சருமி,<br />
பாவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு<br />
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25<br />
<br />
பிணமாய்க் கிடக்கும் பிண்டம், பிணமேல்<br />
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி<br />
காலெதிர் குவித்த பூளை, காலைக்<br />
கதிரெதிர்ப் பட்ட கடும்பனிக் கூட்டம்;<br />
அந்தரத் தியங்கு மிந்திர சாபம்; 30<br />
<br />
அதிரு மேகத் துருவி னருநிழல்<br />
நீரிற் குமிழி; நீர்மே லெழுத்து;<br />
கண்டுயில் கனவிற் கண்ட காட்சி;<br />
அதனினும் பொல்லா மாயக் களங்கம்;<br />
அமையு மமையும் பிரானே, யமையும் 35<br />
<br />
இமைய வல்லி வாழியென் றேத்த<br />
ஆனந்தத் தாண்டவங் காட்டி<br />
ஆண்டுகொண் டருள்கைநின் னருளினுக் கழகே. 38<br />
<br />
மூன்றாவது கோயிற்றிருவகவல்<br />
பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்<br />
திருமிடற் றடக்கிய சிவனே யடைக்கலம்!<br />
அடங்கலு மடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்<br />
காலெடுத் தடக்கிய கடவுள்நின் னடைக்கலம்<br />
உலகடங் கலும்படைத் துடையவன் றலைபறித்து 5<br />
<br />
இடக்கையி லடக்கிய இறைவ! நின் னடைக்கலம்!<br />
செய்யபொன் னம்பலச் செல்வ! நின் னடைக்கலம்!<br />
ஐய! நின் னடைக்கலம்! அடியநின் னடைக்கலம்;<br />
மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;<br />
விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும் 10<br />
<br />
ஆண மலத்துதித் தளைந்ததி னுளைத்திடும்<br />
நிணவைப் புழுவெனத் தெளிந்தெடு சிந்தையும்<br />
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்<br />
தவறும் அழுக்காறும் இவறுபொய்ச் சாப்பும்<br />
கவடும் பொய்யும் சுவடும் பெருஞ்சினம் 15<br />
<br />
இகலும், கொலையும், இழிப்புறு புன்மையுங்<br />
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்<br />
முக்குண மடமையும், ஐம்பொறி மயக்கமும்<br />
இடும்பையும் பிணியு மிடுக்கிய ஆக்கையை<br />
உயிரெனுங் குருருவிட் டோடுங் குரம்பையை 20<br />
<br />
எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்<br />
கொழுந்தசை வேய்ந்து மொழுக்குவிழுங் குடிலைச்<br />
செம்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை,<br />
மலவுடற் குடத்தைப் பலவுடற் புட்டிலைத்<br />
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25<br />
<br />
கொலைபடைக் கலம்பல கிடக்கும் கூட்டைச்<br />
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்<br />
கோள்சரக் கொழுகும் பீறல் கோணியைக்<br />
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை<br />
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தை 30<br />
<br />
புலராக் கவலை விளைமரப் பொதும்பை,<br />
ஆசைக் கயிற்றி லாடுபம் பரத்தைக்<br />
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை,<br />
மக்கள் வினையின் மயங்குங் திகிரியைக்<br />
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35<br />
<br />
பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்<br />
காமக் காற்றெடுத் தலைப்பக் கலங்கிக்<br />
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை<br />
இருவினை விலங்கொடு மியங்குபுற் கலனை<br />
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40<br />
<br />
பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்<br />
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடைக்கலம்<br />
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்<br />
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்<br />
இமையா நாட்டத் திறையே! அடைக்கலம். 45<br />
<br />
அடியார்க் கெளியாய்! அடைக்கல மடைக்கலம்;<br />
மறையவர் தில்லை மன்று நின் றாடிக்<br />
கருணை மொண்டலையெறி கடலே! அடைக்கலம்;<br />
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேத்துப்<br />
பாசிழைக் கொடியடு பரிந்தருள் புரியும் 50<br />
<br />
எம்பெருமா நின்இணை யடிக்கு கபயம்;<br />
அம்பலத் தரசே அடைக்கல முனக்கே!<br />
<br />
</b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-49899457804329660542011-02-26T01:18:00.000-08:002011-02-26T01:18:32.224-08:00பட்டினத்துப் பிள்ளையார் திருவேகம்பமாலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;"><b>திருவேகம்பமாலை</b></div><div style="text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://lh4.googleusercontent.com/-nK2U2qPyzeo/TMZh09EGQlI/AAAAAAAAAO0/cGx6KlmpbtU/s1600/%2527%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2527.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="400" src="https://lh4.googleusercontent.com/-nK2U2qPyzeo/TMZh09EGQlI/AAAAAAAAAO0/cGx6KlmpbtU/s400/%2527%25E0%25AE%25AA%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%2527.jpg" width="297" /></a></div><div style="text-align: center;"><br />
</div><div style="text-align: center;"><br />
</div><b>அறந்தா னியற்று மவனிலுங்கோடி யதிகமில்லந்<br />
துறந்தான், அவனின் சதகோடி யுள்ளத்துறவுடையோன்;<br />
மறந்தா னறக்காற் றறிவோடிருந்திரு வாதனையற்று<br />
இறந்தான் பெருமையையென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 1<br />
<br />
கட்டியணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்<br />
வெட்டிமுறிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்திவிட்டாற்<br />
கொட்டிமுழக்கி யழுவார்; மயானங் குறுகியப்பால்<br />
எட்டி யடிவைப்ப ரோ? யிறைவா ! கச்சியேகம்பனே. 2<br />
<br />
கைப்பிடி நாயகன் தூங்கையிலே யவன்கையெடுத்து<br />
அப்புறங்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்<br />
ஒப்புடன்சென்று துயில்நீத்துப் பின்வந் துறங்குவளை<br />
எப்படிநான் நம்புவேன்? இறைவா ! கச்சியேகம்பனே ! 3<br />
<br />
நன்னாரில் பூட்டிய சூத்திரப்பாவை நன்னார்தப்பினால்<br />
நன்னாலுமாடிச் சலித்திடுமோ அந்தத் தன்மையைப்போல்<br />
உன்னால்யானுந் திரிவதல்லால் மற்றுனைப் பிரிந்தால்<br />
என்னாலிங் காவதுண்டோ? இறைவா ! கச்சியேகம்பனே ! 4<br />
<br />
நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமே<br />
அல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்<br />
இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்<br />
எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனே ! 5<br />
<br />
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை<br />
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்<br />
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு<br />
இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே ! 6<br />
<br />
பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்<br />
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்<br />
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது<br />
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே ! 7<br />
<br />
அன்னவிசார மதுவேவிசாரம் அதுவொழிந்தால்<br />
சொன்ன விசாரந் தொலையா விசாரம் நல்தோகையரைப்<br />
பன்னவிசாரம் பலகால் விசாரமிப் பாவிநெஞ்சக்கு<br />
என்னவிசாரம் வைத்தாய் இறைவா, கச்சியேகம்பனே ! 8<br />
<br />
கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி<br />
நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்<br />
சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்<br />
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே. 9<br />
<br />
மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்<br />
வீயவிட்டோடி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்<br />
தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்<br />
தேயும தேநிட்டை, யென்றா னெழிற் கச்சியேகம்பனே. 10<br />
<br />
வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிற்சென்று<br />
சரிக்கோதுவேன் எழுத்தஞ்சுஞ் சொலேன், தமியேனுடலம்<br />
நரிக்கோ? கழுகுபருந்தினுக்கோ? வெய்யநாய் தனக்கோ?<br />
எரிக்கோ? இரையெதற்கோ? இறைவா, கச்சியேகம்பனே. 11<br />
<br />
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டியென் கண்ணெதிரே<br />
மாதென்று சொல்லி வருமாயை தன்னை மறலிவிட்ட<br />
தூதென் றெண்ணாமற் ககமென்று நாடுமித் துர்ப்புத்தியை<br />
ஏதென் றெடுத்துரைப்பேன்? இறைவா, கச்சியேகம்பனே. 12<br />
<br />
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற<br />
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்<br />
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே<br />
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. 13<br />
<br />
சீறும்வினையது பெண்ணுரு வாகித் திரண்டுருண்டு<br />
கூறுமுலையு மிறைச்சியு மாகிக் கொடுமையினால்<br />
பீறுமலமு முதிரமுஞ் சாயும் பெருங்குழிவிட்டு<br />
ஏறுங்கரைகண்டி லேன், இறைவா, கச்சியேகம்பனே. 14<br />
<br />
பொருளுடை யோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்தும்<br />
தெருளுடை யோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்<br />
அருளுடை யோரைத் தவத்திற் குணத்தி லருளிலன்பில்<br />
இருளுறு சொல்லினுந் காணத்தகுங் கச்சி யேகம்பனே. 15<br />
<br />
பருத்திப் பொதியினைப்போலே வயிறுபருக்கத் தங்கள்<br />
துருத்திக்கு அறுசுவை போடுகின்றார், துறந்தோர்தமக்கு<br />
வருத்தி யமுதிடமாட்டார், அவரையிம் மாநிலத்தில்<br />
இருத்திக் கொண்டேனிருந்தா யிறைவா! கச்சியேகம்பனே. 16<br />
<br />
பொல்லா விருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்கு<br />
அல்லா யிருந்திடு மாறொக்குமே அறிவோ ருளத்தில்<br />
வல்லா ரறியார் தமக்கு மயக்கங் கண்டாய்,<br />
எல்லாம் விழிமயக் கேயிறைவா, கச்சி யேகம்பனே. 17<br />
<br />
வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார் வழக்குரைப்பர்;<br />
தீதுக் குதவியுஞ் செய்திடுவார், தினந்தேடி ஒன்று<br />
மாதுக் களித்து மயங்கிடுவார் விதி மாளுமட்டும்<br />
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா, கச்சியேகம்பனே. 18<br />
<br />
ஓயாமற் பொய்சொல்வர், நல்லோரை நிந்திப்பர், உற்றுப்பெற்ற<br />
தாயாரை வைவர், சதியாயிரஞ் செய்வார், சாத்திரங்கள்<br />
ஆயார், பிறர்க்குபகாரஞ் செய்யார், தமையண்டி னர்க்கொன்<br />
றீயா ரிருந்தென்ன போயென்னகாண் கச்சி யேகம்பனே. 19<br />
<br />
அப்பென்றும் வெண்மையதாயினும் ஆங்கந்நிலத்தியல் பாய்த்<br />
தப்பின்றியே குணவேற்றுமை தான்பல சார்தலினால்<br />
செப்பில் அபக்குவம் பக்குவமாயுள்ள சீவரிலும்<br />
இப்படி யே நிற்பன் எந்தைபிரான் கச்சியேகம்பனே. 20<br />
<br />
நாயாய்ப் பிறந்திடில் நல்வேட்டை யாடிநயம் புரியும்<br />
தாயார வயிற்றில் நாராய்ப் பிறந்தபின் கம்பன்னராய்க்<br />
காயாமரமும் வறளாங் குளமும் கல்லாவு மன்ன<br />
ஈயாமனிதரை யேன் படைத்தாய்? கச்சி யேகம்பனே. 21<br />
<br />
ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்<br />
போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்<br />
கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்<br />
ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே. 22<br />
<br />
பெண்ணாகி வந்தொரு மாயப்பி சாசும் பிடித்திட்டென்னைக்<br />
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்<br />
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப்பொருள் பறிக்க<br />
எண்ணா துனைமறந் தேனிறைவா ! கச்சியேகம்பனே. 23<br />
<br />
நாவார வேண்டு மிதஞ்சொல்லுவார் உனைநான் பிரிந்தாற்<br />
சாவேனென் றேயிருந்தொக்கவுண் பார்கள்கைதான் வறளின்<br />
போய்வாரு மென்று நடுத்தலைக் கேகுட்டும் பூவையர்க்கு<br />
ஈவார் தலைவிதியோ? இறைவா, கச்சியேகம்பனே. 24<br />
<br />
கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்<br />
சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடி<br />
நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்<br />
இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. 25<br />
<br />
வானமு தத்தின் சுவையறி யாதவர் வன்கனியின்<br />
தானமு தத்தின் சுவையெண்ணல் போலத் தனித்தனியே<br />
தேனமு தத்தின் தெளிவாய ஞானஞ் சிறிதுமில்லார்க்<br />
ஈனமு தச்சுவை நன்று அல்லவோ? கச்சியேகம்பனே. 26<br />
<br />
ஊற்றைச் சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த<br />
பீற்றற் து ருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசரிய<br />
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே<br />
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே. 27<br />
<br />
சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த<br />
பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்<br />
அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று<br />
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே, 28<br />
<br />
முட்டற்ற மஞ்சளை யெண்ணெயிற்கூட்டி முகமினுக்கி<br />
மெட்டிட்டுப் பொட்டிட்டுப் பித்தளையோலை விளக்கியிட்டுப்<br />
பட்டப் பகலில் வெளிமயக் கேசெயும் பாவையர்மேல்<br />
இட்டத்தை நீதவிர்ப்பாய் இறைவா, கச்சியேகம்பனே. 29<br />
<br />
பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தை<br />
மறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்<br />
பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் பாவையர்க்கீந்து<br />
இறந்திடவோ பணித்தாய் இறைவா, கச்சியேகம்பனே. 30<br />
<br />
பூதங்களற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்<br />
பேதங்குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முன்அற்றுக்<br />
காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே<br />
ஏதங் களைந்திருப் பேனிறைவா, கச்சியேகம்பனே. 31<br />
<br />
நல்லா யெனக்கு மனுவொன்று தந்தருள், ஞானமிலாப்<br />
பொல்லா எனைக்கொன்று போடும்பொழுதியல் பூசைசெபஞ்<br />
சொல்லாநற் கோயில்நியமம் பலவகைத் தோத்திரமும்<br />
எல்லா முடிந்தபின் கொல்லுகண்டாய் கச்சியேகம்பனே. 32<br />
<br />
சடக்கடத்துக் இரைதேடிப் பலவுயிர் தம்மைக்கொன்று<br />
விடக்கடித்துக் கொண்டிறுமாந் திருந்து மிகமெலிந்து<br />
படங்கடித் தின்றுழல்வார்கள் தமைக்கரம் பற்றிநமன்<br />
இடக்கடிக்கும் பொழுதேது செய்வார்? கச்சியேகம்பனே. 33<br />
<br />
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்<br />
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்<br />
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது<br />
ஏறும் படியருள்வாய் இறைவா, கச்சியேகம்பனே. 34<br />
<br />
சொக்கிட்டு அரண்மனைப் புக்குள்திருடிய துட்டர்வந்து<br />
திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோல் சிவநிந்தைசெய்து<br />
மிக்குக் குருலிங்க சங்கமம்நிந்தித்து, வீடிச்சிக்கும்<br />
எக்குப் பெருந்தவர்க்கென் சொல்லுவேன் ? கச்சியேகம்பனே. 35<br />
<br />
விருந்தாக வந்தவர் தங்களுக் கன்னமிகக்கொடுக்கப்<br />
பொருந்தார் வளம்பெற வாழ்வார்நின் நாமத்தைப்போற்றி நித்தம்<br />
அருந்தா முலைப்பங்க ரெண்ணாதபாதகர் அம்புவியில்<br />
இருந்தாவதேது? கண்டாய் இறைவா, கச்சியேகம்பனே. 36<br />
<br />
எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி<br />
வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்<br />
சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்<br />
எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே. 37<br />
<br />
பொன்னைநினைந்து வெகுவாகத் தேடுவர், பூவையன்னாள்<br />
தன்னைநினைந்து வெகுவாய் உருகுவார், தாரணியில்<br />
உன்னை நினைந்திங் குனைப்பூசியாத உலுத்தரெல்லாம்<br />
என்னையிருந்து கண்டாய் இறைவா; கச்சியேகம்பனே. 38<br />
<br />
கடுஞ்சொலின் வம்பரை ஈனரைக்குண்டரைக் காமுகரைக்<br />
கொடும்பாவமே செய்யும் நிர்மூடர்தம்மைக் குவலயத்துள்<br />
நெடும்பனைபோல வளர்ந்து நல்லோர் தம்நெறியறியா<br />
இடும்பரை என்வகுத்தாய்; இறைவா, கச்சியேகம்பனே. 39<br />
<br />
கொன்றேன் அனேகமுயிரை எலாம்பின்பு கொன்றுகொன்று<br />
தின்றே அதன்றியும் தீங்குசெய்தேன் அதுதீர்கவென்றே<br />
நின்றேன் நின்சன்னிதிக்கே அதனால் குற்றம்நீபொறுப்பாய்<br />
என்றே யுனைநம்பினேன் இறைவா, கச்சியேகம்பனே. 40<br />
<br />
ஊரிருந்தென்ன ? நல்லோர் இருந்தென்ன உபகாரமுள்ள<br />
பேரிருந்தென்ன ? பெற்றதாய் இருந்தென் மடப்பெண்கொடியாள்<br />
சீரிருந்தென்ன ? சிறப்பிருந் தென்ன இத்தேயததினில்<br />
ஏரிருந்தென்ன ? வல்லாய் இறைவா கச்சியேகம்பனே. 41<br />
<br />
வில்லால் அடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்<br />
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர்ந்து<br />
அல்லார் பொழில்தில்லை அம்பலவாணர்க்குஓர் அன்னைபிதா<br />
இல்லாததால் அல்லவோ, இறைவா கச்சிஏகம்பனே. 42<br />
<br />
</b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-59240438373768034402011-02-23T21:39:00.001-08:002011-02-23T21:39:58.707-08:00<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b style="color: red;">ஓம் சிவய நம<br />
<br />
நீர் ஓரு பிடி தந்தீர் ! அதில் அடியேன் நீர் விட்டு பிடித்தேன் ஒரு இறைவடிவம் வந்தது வந்த வடிவம் அருள் தந்த்து அடியேனை ஆட்கொண்டது இன்று சிவசித்தேஸ்வரராக எம் இல்லத்தில் ஆட்சி செய்கிறார் உம் அருளால். சிவ சித்தரே உமக்கு எனது கோடான கோடி நன்றி!<br />
<br />
நல்ல குருவழியிலே நடக்க மறுக்கும் மாந்தரே!<br />
தம் நினைக்கும் வழியே தங்கம் என்று சொல்லியே!<br />
தடம் மாறும் மாந்தரே! தடம் மாறிய பின்னரே<br />
சூடு வந்து தாக்குமே சூட்டின் சூட்சம்ம் அறிந்து<br />
கொண்ட பின்னரே அமைதியாக ஆவிரே!<br />
காரண குருவின் வழியிலே கலையை கற்க வேண்டுமே!<br />
கற்ற கலையின் மூலமாய் வாசியை உணர வேண்டுமே!<br />
வாசியை உணர்ந்த பின்னரே கரை ஏற முடியுமே!<br />
<br />
<br />
பாரப்பா பரமனே, இந்த பாலனின் நிலையை <br />
சிந்தையில் சிவத்தை நினைத்து நெறியில் சித்தர்கள்<br />
சொன்ன வழியில் செல்ல முயல்கிறேன்! முயற்சி<br />
எடுத்தேன் முன்னேறுவேன் தன்னை அறியும் நிலையில்<br />
இருக்கும் இச்சிறுவனை இறையை அறிந்து இன்பம்<br />
பெற விடுவரோ இந்த மாந்தர்கள் அடியேன்<br />
சிந்தையில் சிவம் இன்றி வேறு ஒன்றும் அறியேனே!<br />
சிவ சித்தன் வழியில்<br />
<br />
<br />
மானிடனாய் பிறக்கச் செய்து மண்ணுலகில் மலரச் செய்து மகான்கள் மூலம் மாண்புகள் அறிய செய்த மானிட ரகசியத்தை உணர செய்த ஐயனே! <br />
வாழ்வை வளமாக்க எம் மெய் குரு வழிகாட்டுதலால் வாசியை அறியச் செய்த அப்பனே!<br />
மானுடம் என்னும் தேரில் இரு குதிரையை அடக்கி அடக்கிய குதிரையை தேரில் âட்டி எம்முள் இருக்கும் ஐயனை உணர்ந்து அந்த தேரில் வலம் வர செய்தேனே <br />
<br />
<br />
நீரின்றி அமையாது உலகு அய்யன் வாக்கு!<br />
வாசியின்றி எதுவாழ்வு எம்மெய்குரு வாக்கு!<br />
<br />
தன்னுள் வாசியை நிலை நிறுத்தி தன்நிலை<br />
உணர்ந்து இறைநிலை அறிந்து<br />
இன்பமான பெருவாழ்வு வாழ எம்<br />
மெய்குரு சொல்லை தாண்டேனே!<br />
<br />
சிவ சிவ என்று சொல்லி<br />
சிவயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை<br />
சிந்தையில் சிந்தித்து எம்பெய்குரு<br />
சிவசித்தர் அருளும் அவர்தம் வழிகாட்டுதலும்<br />
அடியேன் பிண்டத்தில் எம் அரனாய்<br />
காண்பேனே!<br />
<br />
அதிகாலை வேளையில் ஆதவன் வருமுன்<br />
நித்திறையை கலைத்து முத்திரையில்<br />
நிலைத்து தன்னுல் வாசியை<br />
நிலை நிறுத்தி மெய்பொருள் உணர்ந்து <br />
தன்னுல் இறைவனை காண்போமே!<br />
<br />
<br />
சிவய நம குருவே துணை சிவசித்தா அருள்<br />
<br />
குரு சொன்ன அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் ஒலிக்கிறது.<br />
<br />
அமைதியாய் இரு அன்பாய் இரு அன்னையாய் – வணங்கு சுற்றமும் நட்பையும் உணர்ந்து நடந்து கொள் அடியார்க்கு அன்புசெய்.<br />
<br />
அறம் என்று சொல்லி வாழ்வை வழிநடத்து. இன்பமாய் இரு இன்பம் எது என்று அறிந்து இரு இன்பம் என்பது இறை அறியும் நிலையை தவிர வேறு எதிலிலும் இன்பம் இல்லை. மற்றவை எல்லாம் மாயை மறக்காதே!<br />
<br />
மானுடனாய் பிறந்ததற்கு தன் கடமையை செய்! அது பல தவம் செய்த பலன் உன்னை தேடி வந்தடையும்!<br />
<br />
நெறி தவறாமல் நிதியை வணங்கு உண்மையை உணர்ந்து உலகுக்கு கூறு! கோபம் செய்யாதே! பாவம் செய்யாதே! பலனை எதிர் பாராதே! பாவம் செய்யாதே! உன் கடமையை செய்! இறை உமக்கு உடைமையை செய்வார்! <br />
<br />
இன்னும் பல வழிகளில் என்னுள் ஒலிக்கிறது!<br />
இதை நான் உணர்ந்த பின் கூறுகிறேன்!<br />
இந்த நிகழ்வு அருணகிரிநாதரை நினைவுபடுத்துகிறது.<br />
<br />
அருணகிரிநாதருக்கு அவர் தமக்கை சும்மா இரு என்று சொல்லி அமர வைத்து இறையையும் அவரையும் உணர வைத்தனா. இன்று எம் மெய் குரு அமைதியாக இரு என்று சொல்லி அகிலத்தை அறிய செய்தார். <br />
<br />
அறியாதோர் பிறப்பென்று அடியேனை எம்மெய் குரு சொல்ல ஆயத்தமாவேனே! எம் மெய்குருவால் எமக்கு இன்று பெயர் பெருமை இதை எண்ணி சகக்கோடி ஆனந்தம் அடைகிறேன் அப்பனே!<br />
<br />
எம்மால் எம்மெய் குருவிற்கு நற்பெயர் தேடி சேர்ப்பேனே பரம் பொருளே! பாரில் உள்ளோரிடம் பண்பாளன் என்று உண்மை உளான் உத்தமன் நேர்மை உளான் நெறி தவறாதவன் என்றும் பேர் எடுப்பேன்.<br />
<br />
குருவழி தவறாமல் குறை எதும் நேராமல் முறை தவறாமல் நடந்து நமச்சிவயத்தை நாடுவேன்.<br />
<br />
என்று வழி தவறியது இல்லை இனியும் தவற வழியில்லை அய்யனே! <br />
<br />
எம்முள் எம் குரு இருக்க எம் குருவின் உள்ளே இறைவன் இருக்க எனக்கேது குறை<br />
<br />
குளம் கலங்கிய பின்னால் நீர் தெளியும் அதுபோல் யாம் இறை அறியும் முன்னரே! எம் நலம் விரும்பிகள் அடியேனை தவறாக உணர்ந்து உண்மை அறியாமல் எம்மிடம் இருந்து பிரிந்து செல்கின்றனரே.<br />
<br />
குருவே அறியதோர் பிறப்பு என்று சொல் கேட்க அடியேனுக்கு ஆசி தாருங்கள் குருவே.<br />
<br />
நல்லதோர் பாதை செல்வேன் என்று தம்மோருக்கு வாக்கு தந்து வந்த பாதை மறந்து வழிகாட்டியோர்க்கு வலிவர செய்து ஒழுக்க நெறி தவறி வாழக்கை இழக்க வேண்டாமே!<br />
<br />
படைத்தவன் தன்னையே பார் என்று பெரியோர் சொல் மதிக்காமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து அழிவுக்கு செல்ல வேண்டாமே!<br />
<br />
திருச்சிற்றம்பலம்!<br />
திருச்சிற்றம்பலம்!<br />
திருச்சிற்றும்பலம்!</b><br />
</div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-69018420165666803622011-02-23T20:45:00.000-08:002011-02-23T20:45:41.256-08:00ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_dIAV9lmaXXA/SkHrjiOMsgI/AAAAAAAAAEs/XbVWc4LUYGQ/s1600-h/2.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5350816828007166466" src="http://2.bp.blogspot.com/_dIAV9lmaXXA/SkHrjiOMsgI/AAAAAAAAAEs/XbVWc4LUYGQ/s400/2.jpg" style="cursor: pointer; display: block; height: 400px; margin: 0px auto 10px; text-align: center; width: 267px;" /></a> <u style="color: blue;"><span style="font-weight: bold;">ஏழு ஆதாரங்கள் </span> </u></div><br />
<div style="color: red; text-align: left;"><b><span style="font-size: x-small;">ஆதாரம் என்பது நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் (சூட்சமத்தில் ) இருக்கக்கூடிய சக்தி மையங்கள் ஆகும் . இவை ஏழு இருப்பதாக யோகிகள் கூறுகின்றனர். </span></b></div><div style="color: red; text-align: left;"><b><br />
<a href="" name="more"></a></b> <b><br />
</b> </div><div style="color: red; text-align: left;"><b><span style="font-size: x-small;">அவற்றை முறையே </span></b></div><div style="color: red; text-align: left;"><b><br />
</b> </div><ul style="color: red; text-align: left;"><li><b><span style="font-size: x-small;">மூலாதாரம், </span></b></li>
<li><b><span style="font-size: x-small;">ஸ்வாதிஸ்டானம் ,</span></b></li>
<li><b><span style="font-size: x-small;"> மணிப்பூரகம் ,</span></b></li>
<li><b><span style="font-size: x-small;">அனாகதம்,</span></b></li>
<li><b><span style="font-size: x-small;">விசுத்தி , </span></b></li>
<li><b><span style="font-size: x-small;">ஆக்ஞை ,</span></b></li>
</ul><div style="color: red; text-align: left;"><b><br />
</b> </div><div style="color: red; text-align: left;"><b><span style="font-size: x-small;"> மற்றும் இறுதிநிலை ஆதாரமாக சஹஸ்ராரம்</span></b></div></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-64127631965651757202011-02-23T20:43:00.000-08:002011-02-23T20:43:37.713-08:00மூலாதாரம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="color: red; text-align: left;"><span style="font-size: x-small;"><u><span style="font-weight: bold;">மூலாதாரம்</span></u></span></div><div style="text-align: left;"><span style="font-size: x-small; font-weight: bold;"> </span> <span style="font-size: x-small;"><a href="http://4.bp.blogspot.com/_dIAV9lmaXXA/SkHttWND9KI/AAAAAAAAAE8/GKk575r9crg/s1600-h/3.jpg"><img alt="" border="0" height="133" id="BLOGGER_PHOTO_ID_5350819195603121314" src="http://4.bp.blogspot.com/_dIAV9lmaXXA/SkHttWND9KI/AAAAAAAAAE8/GKk575r9crg/s200/3.jpg" style="display: block; height: 267px; margin: 0px auto 10px; text-align: center; width: 400px;" width="200" /></a></span><span style="font-size: x-small;"> <b>மூலாதாரம் என்பது முதுகெலும்பு முடியும் இடத்தில் உள்ளது . </b></span></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">இந்த சக்கரம் எருவாய்க்கு (குதம் )இரண்டு விரல் கட்டை மேலும் கருவாய்க்கு (குறி) இரண்டு விரல் கட்டைக்கு கீழேயும் உள்ளது. </span></b></div><div style="text-align: left;"><b><br />
</b> </div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">இதுவே முதல் ஆதாரமாகவும் எல்லா ஆதாரங்களுக்கு அடிப்படை முதல் ஆதாரமாக இருப்பதோடு குண்டலினி என்ற பிரம்ம சக்தி கேந்திரமாகவும், (பிராணன் , நாதம் , ஹம்சம் ) என்ற பிராண மந்திரமும் தோன்றும் இடம் என்றும் முடுகுதண்டின் (எலும்பின் ) கீழும் அமைந்த விடமாகும். </span><br />
</b> </div><div style="text-align: left;"><b><br />
</b> </div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">பஞ்ச ( ஐம் பூதங்களில்) ஒன்றான மண் , (லம்) பிரித்வி , இதன் நிறம் மஞ்சள் . இதன் அதி தேவதை மஹா கணபதியாக இருப்பதால் பிரணவ சப்தமாகவும் ஓங்கார வடிவமாகவும் , ஓங்கார உற்பத்தி தலமாகவும் விளங்குகிறது.</span></b></div><div style="text-align: left;"><b><br />
</b> </div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;"> இந்த மூலாதார சக்கரத்திற்கு வடிவம் வட்டத்தின் உள் அமைந்த முக்கோணமும் அதன் நடுவில் நான்கு இதழ்களும், அந்த இதழ்களில் ஒவ்வொன்றிலும் வல வரிசையாக</span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;"> மனம் , </span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">புத்தி, </span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">சித்தம் , </span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">அஹங்காரம் ,</span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;"> வ , ச ,ஷ, ஸ , </span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">என்ற நான்கு அக்ஷரங்களும் , நான்கு தத்துவங்களாக இடம் பெற்று உள்ளன. </span></b></div><div style="text-align: left;"><b><br />
</b> </div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">இங்கிருந்து சுழுமுனை என்ற " ஒலி" மற்றும் "ஒளி" வடிவமான நாடி புறப்பட்டு முதுகுத்தண்டின் வழியே முகுளம் என்ற உறுப்பு வழியே கபாலம் அடைகிறது </span></b></div><div style="text-align: left;"><b><span style="font-size: x-small;">என சித்தர்கள் கூறுகின்றனர்.</span></b></div><div style="text-align: left;"><br />
</div></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-42747544709754106762011-02-22T22:54:00.000-08:002011-02-22T22:54:25.353-08:00Jesus and Vaasi<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b></b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-gIyqYDD2_vk/TWSulZvMGmI/AAAAAAAAAk8/ZkchEJAUN2o/s1600/jesus.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/-gIyqYDD2_vk/TWSulZvMGmI/AAAAAAAAAk8/ZkchEJAUN2o/s320/jesus.jpg" width="253" /></a></div><div style="text-align: center;"><span style="font-size: large;"><b>Jesus and Vaasi</b></span></div><br />
<br />
<b style="color: red;">ஊசி சுழி முனை உச்சியின் மீதில் <br />
நாசியின் மேலே நான்கு அங்குலத்தில்<br />
வாசியின் வீடு வரபதியானது .................நந்தீசர் கருக்கிடை ௪௭<br />
<br />
ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமும் இருக்கிறது<br />
அதை கண்டு பிடிபவர்கள் சிலர் ...................................மத்தேயு ௭:௧௪ </b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-34703958461385112112011-02-22T22:27:00.000-08:002011-02-22T22:39:52.071-08:00அடியாரின் இல்ல மணவிழா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-qZ6kcrrgZZs/TWSoqY-U6nI/AAAAAAAAAk4/1xXyq2vTHJs/s1600/vilvam3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="110" src="http://3.bp.blogspot.com/-qZ6kcrrgZZs/TWSoqY-U6nI/AAAAAAAAAk4/1xXyq2vTHJs/s400/vilvam3.jpg" width="400" /></a></div><br />
<br />
<b><span style="color: red;">அடியாரின் இல்ல மணவிழாவிற்கு சென்று</span><br style="color: red;" /><span style="color: red;">அமுதுண்டு மணமக்கள் மங்களமாகவும்</span><br style="color: red;" /><span style="color: red;">மகப்பேறு பெற்றும் இன்பமாய் வாழ</span><br style="color: red;" /><span style="color: red;">என் ஆசானை நினைத்து ஈசனிடம் வேண்டினேன்!</span></b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8293762391927237321.post-3927442445744968682011-02-22T22:25:00.000-08:002011-02-22T22:40:25.076-08:00குரு மரியாதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-nuNqnoT79uU/TWSoLFMFOPI/AAAAAAAAAk0/CCDBOLHnAs8/s1600/vilvam2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="111" src="http://3.bp.blogspot.com/-nuNqnoT79uU/TWSoLFMFOPI/AAAAAAAAAk0/CCDBOLHnAs8/s400/vilvam2.jpg" width="400" /></a></div><div style="text-align: center;"><b>ஓம் சிவயநம!</b></div><br />
<b>குரு மரியாதை தெரியாத குருடரே!<br />
குரு அருள் உணர்ந்து தம் குறை களைந்து<br />
குன்று ஏறுவது எக்காலம்!<br />
<br />
குரு சொல்வதே வேதம் என்பார் ஞானம் பெற்றோர்!<br />
குரு சொல்லே குதர்க்கம என்பார் அறிவிலார்!<br />
தம்முள்ளே குறைவைத்து மெய் குருவை<br />
வணங்கினேன் மேன்மை பெறவில்லை என்பார்!<br />
குரு சொல்லைக் கேளு! குறை இல்லாமல் வாழ்வீர்!</b></div>அடியேன்S.வீரமனிகண்ணன்http://www.blogger.com/profile/03234405765353950955noreply@blogger.com0