best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, March 5, 2011

ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்

பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு

கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை

எப்பிறப்பில் காண்பேன் இனி.



முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே

அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி

சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ

எரியத் தழல் மூட்டுவேன்.



வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்

கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்

சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ

விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.



நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை

தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்

கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ

மெய்யில் தீமூட்டு வேன்.



அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு

வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள

தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ

மகனே என அழைத்த வய்க்கு.



அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்

கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள

முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்

மகனே என அழைத்த வய்க்கு.





விருத்தம்:

முன்னை இட்ட தீ முப்புரத்திலே

பின்னை இட்ட தீ தென் இலங்கையில்

அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே

யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.



வெண்பா:

வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்

ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்

குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்

கருதி வளர்த்தெடுத்த கை.



வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்

வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்

உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து

என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.



வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்

நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறு ஆனாள்- பால் தெளிக்க

எல்லாரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்.

0 Comments:

Post a Comment



TIME