best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, August 31, 2011

பிறப்பால் எவரும் அந்தணர் ஆகமுடியாது



பிறப்பால் எவரும் அந்தணர் ஆகமுடியாது. வாழ்வில் அறவழியில் நின்று இறைநிலை அடைபவர்களே அந்தணர்கள்.

"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது."

தமிழச்சித்தர்கள் அனைவரும் அறவழி நின்று பிறப்பு, இறப்பாகிய பெருங்கடலை நீந்தி பிறப்பு, இறப்பாகிய ஊழின் தொடர்ச்சியை வென்றவர்கள். சித்தபெருமான் திருவள்ளுவரும் அந்தணரே. அவர் தாள் சேர்ந்தால் பிறப்பு, இறப்பை வெல்லும் அறிவைப் பெறலாம். திருக்குறள் தமிழர் வேதம். ஆசான் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி.

அய்யன் வள்ளுவப்பெருமான் அருளிய நூல்கள்

1. ஞானவெட்டியான் - 1500
2. திருக்குறள் - 1330
3. ரத்தினசிந்தாமணி - 800
4. பஞ்சரத்தனம் - 500
5. கற்பம் - 300
6. நாதாந்த சாரம் - 100
7. நாதாந்த திறவுகோல - 100
8. வைத்திய சூத்திரம் - 100
9. கற்ப குருநூல் - 50
10. முப்பு சூத்திரம் - 30
11. வாத சூத்திரம் - 16
12. முப்புக்குரு - 11
13. கவுன மணி - 100
14. ஏணி ஏற்றம் - 100
15. குருநூல் - 51
(இவர்கள் அருளிய நூல்கள் இன்னும் இருக்கலாம்)

0 Comments:

Post a Comment



TIME