best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, December 7, 2010

காகபுசுண்டர் பாடல்

காகபுசுண்டர் உபநிடதம்

தானென்ற குருவினுபதேசத்தாலே
...தனுகரண அவித்தையெல்லாந் தவறுண்டேபோம்
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்
மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்
நானென்ற பிரபஞ்ச வுற்பத்திக்கு
நாதா நீதக்யானம் நன்றா யெய்தும்
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே

 




பொருள்

தன்னைதான் அறிந்த நல்லாசிரியரின் அறிவுரையாலே உடல் கருவி அனுபவநிலைகளால் உண்டான தவறுகள் எல்லாம் போகும்

உயர்ந்த மேலான அனுப ஞானம் உண்டாகும். மவுன யோக வாழ்க்கை எய்தலாம். நானென்ற சுயபிரக்ஞை உடைய பிரபஞ்ச உயிர்களின் உற்பத்திக்குரிய நாலாவிதமான... அறிவு அடையலாம்.

ஆசிரியரான கொங்கணவர் எமக்குரைத்த யோகத்தை கூர்ந்து பாருங்கள்

0 Comments:

Post a Comment



TIME