best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, December 1, 2010

கோம்பைச்சித்தர்

முற்றும் துறந்தவர்களாக, ஆடைஅணியும் ஆர்வமில்லாதர்களாக ஆகாயம் போன்று எங்கும் பறந்து செல்லும் தன்மையுடையவர்களாக, பிள்ளைகளையும் பித்தர்களையும் பேய்களையும் போலக்கட்டுப்பாடில்லாமல், புவியில் திரிவார்கள் பூரண ஞானிகளாகிய “சிவன் முக்தர்கள்” என பகவான் சங்கரர் விவேக சூடாமணி என்னும் நூலில் கூறியுள்ளார். இந்த அருளுரையின்படி வாழ்வாங்கு வாழ்ந்து திகழ்ந்தவர் அருள் ஞானி கோம்பை சுவாமிகள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கோம்பை என்னும் ஊரில் சமதளவாய் என்பவர் ஜமீந்தாராக வாழ்ந்தவர். அவருக்கு மகனாகத் தோன்றியவரே வேலு தளவாய். இளமைப் பருவத்தில் இறைவன் இவர் முன் தோன்றி அருள்பாலிக்க, வேலு தளவாய் பந்த பாசம் என்னும் மாயையை விலக்கி லௌகீக வாழ்க்கையில் பற்றில்லாதவராக பரமஞானம் பெற்றார். கி.பி. 1865 ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி) அருகே உள்ள வடசேரிக்கு வந்தருளினார்.

சித்தர் அம்சம் பெற்ற சுவாமிகள் நீராடும் வழக்கமுடையவர் அல்ல. அவரது உடலிலிருந்து துர்நாற்றம் வந்ததில்லை. எந்தக்காலக்கட்டத்திலும் ஆடையில்லாமலும் கைகளில் குப்பைக்கூளங்களையும் எச்சில் இலைகளையும் சுமந்து அலைவார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாக பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு.
கி.பி. 1914ல் நாகர் கோயிலுக்கு வந்த திருவிதாங்கூர் மன்னர் (ஸ்ரீமூலம் திருநாள்) முன்னிலையில் கோம்பை சுவாமிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் அவரை வடசேரி சந்தையில் காவலில் வைத்தனர். ஆனால் காவல் துறைக் கட்டுப்பாட்டையும் மீறி மன்னர் முன் தோன்றினார். மன்னன் வணங்கி, புத்தாடை அணிவித்தார். அப்போதே சித்தர் ஆடையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு மறைந்து விட்டார். இதைக் கண்ட மக்கள் பெரும் வியப்பிலாழ்ந்தனர். இவர் பல அற்புதங்கள் செய்துள்ளார்.

தென்காசியைச் சேர்ந்த துறவி ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்து வந்த குன்மநோயை கொஞ்சம் மணலை அள்ளி அவர் வயிற்றில் தேய்த்ததன் மூலம் குணமடையச் செய்தார். இருந்த இடத்திலிருந்து திடீரென மறைந்து விடுவதும், அதே சமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சி தருவதும் தமது உடலைப் பல்வேறு கண்டங்களாகப் பிரிப்பதும் அவற்றைச் சேர்ப்பதும் அவர் செய்த சித்து விளையாட்டு. ஆன்மீகத்தில் புரட்சி செய்த ஸ்ரீநாராயணகுருசுவாமிகள் கோம்பை சுவாமிகளிடத்தில் அளவற்ற பக்தியும் பாசமும் கொண்டிருந்தார்கள்.

எல்லோருடைய வணக்கத்திற்கும் உரியவராக விளங்கிய சுவாமிகள் 18-2-1925 அன்று புதன்கிழமை இரவு சுமார் 8.00 மணிக்கு ஏகாதசி திதியில் அண்மையில் யாருமில்லாத சமயத்தில் தம் இகிலோக வாழ்வை நீத்து சமாதி அடைந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து அடியவர்கள் திரளாகக் கூடினர். சமாதிச்சடங்குகள் நல்ல முறையில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கேரளாவில் ஆரண்முளையைச் சேர்ந்த தவத்திரு சுவாமி சுயம்பர்ணானந்தா ஈத்தா மொழி வந்து சேர்ந்தார். அவரது முன்னிலையில் மகாசமாதி சடங்குகள் சிறப்பாக நடந்தன. இன்றும் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும், நாட்டின் பல பாகங்களிருந்தும் பக்தர்கள் அங்கு வந்து வணங்கி, அருள் பெற்றுச் செல்கின்றனர்.

0 Comments:

Post a Comment



TIME