best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, December 7, 2010

பாம்பாட்டிச் சித்தர் பாடல்

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடநத
மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
...பூரணசற் குருதாள் கண்டாடாய் பாம்பே

 

பொருள்

வேதத்தின் பொருள் என்ன என்ன என்பதை வேதத்திற்கும் அப்பாற்பட்டு நின்ற மெய்ப்பொருளைக் கண்டு மனதினை ஆய்ந்து உரைத்து அறிவாய் நின்ற பொருள் இதுதான் என்று அறிவுறுத்தும் முழுமை பெற்ற நல்லாசிரியரின் அடிபணிந்து ஆடுவாய் பாம்பே

நாதவெளி என்பது வேதம் ...உரைப்பதாகக் கூறப்படும் நிலை, நாதத்தையும் கடந்து நிற்கும் சுத்த வெளி நிலை ஆதி நிலை. இவ்வாதி நிலையில் அறிவும் அன்புமாகி முற்றுணர்ந்த நிலை . இந்நிலையை அடைவதை உரைக்கும் ஆசிரியரைப் பணிக என்பது விளக்கம்.

0 Comments:

Post a Comment



TIME