best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, October 16, 2010

இடைக்காட்டுசித்தர் பாடல்கள்

இடைக்காட்டுசித்தர்


அந்தக் கரணம் எனச்சொன்னால் ஆட்டையும்
அஞ்ஞானம் என்னும் அடர்ந்தவன் காட்டையும்
சந்தத் தவமென்னும் வாளினால் வெட்டினேன்
...சாவாது இருந்திடக் கோட்டையுங் கட்டினேன் (தாந்)26
 

அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தம்..ஆன்மா? என்றால் அது இல்லை என்றும், மனம் ஒரு பகுதியை மட்டும் காண முடிவு செய்தால், அடுத்த பகுதியைக் காண மறுத்தால், மறுப்பால் அஞ்ஞானம் எழுகிறது என்றும் இவைகளை ஒழிக்க சந்தக் கவிதைகள் இயற்றி தவம் என்னும் வாளினால் அழித்து சாவாது இருக்க கோட்டை (சமாதி) காட்டினேன்.

0 Comments:

Post a Comment



TIME