best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர்




பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய்தேயமன் கொண்டோடிப் போவான்
(பாபஞ்)

சரணம்
சாபங்கொடுத்திட லாமோ? - விதி
தன்னைநம்மாலே தடுத்துடலாமோ?
கோபந் தொடுத்திடலாமோ?-இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ
(பாபஞ்)
பாபஞ்செய்யாதிரு - பாவமான செயல்களை செய்யாதிரு
மனமே - மனமான மாயையே,
நாளைக் - வருங்காலத்தில்
கோபஞ்செய்தே - அப்பாவத்திற்க்கு கோபம் கொண்டு
யமன் - நமனான அந்த யமதருமர்
கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன் வசம் கொண்டு செல்வான்
சாபங்கொடுத்திட லாமோ? - சாபம் கொடுக்காதே
விதி தன்னைநம்மாலே தடுத்துடலாமோ? - அவர் விதியை நம்மால் மாற்ற
முடியாது
கோபந் தொடுத்திடலாமோ? - உயிர்களிடத்தில் கோபம் கொள்ளாதே
இச்சை கொள்ளக் கருத்தைக் கொடுத்திடலாமோ - உன் சொற்-செயல்களை
மற்றவரிடத்தில் திணிக்காதே
பாபஞ்செய்யாதிரு - பஞ்சமா பாவமான செயல்களை செய்யாதிரு

மனமே - மக்கள் மனமான மாயையே,

நாளைக் - வருங்காலத்தில்

கோபஞ்செய்தே - அப்பாவத்தால் கோபம் கொண்டு

யமன் - நமனான அந்த யமதருமர்

கொண்டோடிப் போவான் - பரமபதத்தில் இருக்க வேண்டிய உன் உயிரை தன்
வசம் கொண்டு செல்வான்

0 Comments:

Post a Comment



TIME