best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. 7
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நல்லவர் தம்மைத் தள்ளாதே - உதவும் நல்லவர்களின் சொற்களை தட்டலாகாது,
அறம்நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே - 32 அறங்களில் ஒன்றையும் விடாமல் பாதுகாக்க வேண்டும்
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - புரங்கூறுவதையும், பொல்லாங்கும் சொல்வதையும் செய்யகூடாது
கெட்டபொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே. - தரம் தாழ்ந்த சொற்களையும் பொய்யையும், கோள்-செல்வதையும் தவிர்க வேண்டும்.

0 Comments:

Post a Comment



TIME