best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

பிச்சையென்றொன்றுங்கேளாதே - பிச்சை எடுத்து வாழக்கூடாது, (ஏற்பது இகழ்ச்சி).

எழில் பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே - பெண்ணாசை கொள்ளாதே

இச்சைய துன்னையாளாதே - ஆசை துன்பத்திற்க்கு காரணம், ஆசை வைக்காதே.

சிவன் இச்சை கொண்டதவ் வழியேறி மீளாதே - சிவன் மேல மனம் செலுத்தி, அந்த வழியிலிருந்து அகலாமல் சிவலோகம் அடைவாய், அப்பாதையிலிருந்து மீளாதே அகலாதே.

0 Comments:

Post a Comment



TIME