best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. 4
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
நந்த வனத்திலோ ராண்டி - அழகிய நந்தவனமான இவ்வுலகில் ஒரு ஆண்டி(மனிதன்)
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் - குயவனான இறைவனிடம் நாலும் ஆறும் - ஆக பத்து மாதமாக வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - ஒரு தோண்டியான குழந்தையை பெற்றான்.
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. - அதை சீராக பயன்படுத்தாமல்(கூத்தாடி), நல்வழியில் செலுத்தாமல் (கூத்தாடி), பாபங்களை செய்து கிடைத்தற்கரிய மாணிட பிறவியை வீணாக்கினான் (போட்டுடைத்தாண்டி).

0 Comments:

Post a Comment



TIME