best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

சரணம் # 2

சொல்லருஞ் சூதுபொய் மோசம் - செய்தால்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
நல்லபத்த திவிசு வாசம் - எந்த
நாளும் மனிதர்க்கு நம்மையாய் நேசம்.

பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
சொல்லருஞ் சூதுபொய் மோசம் - சூது, பொய், மோச சிந்தனை அனைத்தும்
செய்தால் சுற்றத்தை - செய்தால் உன் உறவினர், நட்பு சுற்றும் அனைத்தையும்
முற்றாய்த் துடைத்திடும் நாசம் - களைந்துவிடும்
நல்லபத் திவிசு வாசம் - சிவ பக்தி, பகவத் பக்தி போன்ற நல்ல பக்தியும் எஜமானரிடத்தில் விசுவாசமும் கொண்டவர்கள்
எந்த நாளும் - ஞாலம் உள்ள மட்டும்
மனிதர்க்கு நம்மையாய் நேசம். - ராமரை போல், பரசு ராமரை போல், கண்ணனை போல், ஈசனை போல், மனிதர்க்கு நல்லுதாரனமாய் தோன்றுவர்.

0 Comments:

Post a Comment



TIME