best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Friday, November 5, 2010

கடுவெளிச் சித்தர் பாடல்

வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. 8
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
எவ்வாறு வாழவேண்டும் என்று செல்கிறார் சித்தர் பிறான்
வேத விதிப்படி நில்லு - வேதங்கள் சொல்லியபடி மனிதர்களாக வாழவேண்டும்
நல்லோர் மேவும் வழியினை வேண்டியே செல்லு - நால்லோரின் உயரிய வழிதன்னை நாடி செல்ல வேண்டும்
சாத நிலைமையே சொல்லு - சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டும், அதை பிறர்க்கு, போதிக்க வேண்டும்
பொல்லாச் சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு. - பொல்லாத சொத்தான, மனிதனை மிருகமாக்கும், சண்டாளமாக்கும் கோபாத்தை கொல்ல வேண்டும்.

0 Comments:

Post a Comment



TIME