best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Thursday, January 6, 2011

குரு சொன்ன வழியிலே








ஓம் சிவய நம! சிவ சித்தர் அருள் !


நட்ட கல்லிலும் ஐம் பொன்னிலும் தான் ஐயன் உண்டு 
என்று சொல்லி வேதம் ஓதும் மாந்தரே! 

நாசியில் வாசியை ஏற்றி நாதனைக் 
காண வேண்டும் மாந்தரே !

இளமை உள்ள போதிலே ஞான குருவைத் தேடுவீர் !
தேடிய குருவின் வழியிலே நம்மோடு இருக்கும் 
நாதனைக்  கண்டு கொண்ட பின்னரே 
வாழ்வு வளமாகுமே !

நான்கு வேதம் பயின்றபின் நல்வழியில் செல்லவே 
நாதன் நம்முள் இருக்கவே 
நாளும் கிழமையும் நல்லதே நான்கு திசை ஓடியே 
நாளும் பொழுதும் கழிந்து போன பின்னரே 
இன்னும் உணரவில்லையே என்று கூறுவார் 
எங்கள் குருநாதரே !

குரு சொன்ன வழியிலே வாசியின் முறையிலே 
நாதனை தினம் தினம் பார்க்கிறோம் பார்த்து 
பலன் அடைகிறோம் 
குருவே உங்கள் பாதம் சரணம் !



அடியேன்S.வீரமனிகண்ணன் 

2 Comments:

  1. Unknown said...
    சிவவாக்கியர் பாடல் காஸெட்டாக கிடைக்குமா. விவரம் தாருங்கள்.
    Unknown said...
    மற்ற சித்தர்கள் பாடல்களும் காஸெட்டாக கிடைக்குமா? புதுக்கோட்டையிலிருந்து அசோகன் ..உங்கள் வலைத்தளம் மிகவும் அழகாக உள்ளது...ஞானமும் அறிவும் சேர்ந்தது...ஞானப்பூ மலர்ந்தது.

Post a Comment



TIME