best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, January 5, 2011

"காடேதிரிந்தென்ன? காற்றே புசித்தென்ன?"


"காடேதிரிந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தை சுற்றி
ஓடே எடுத்தென்ன? உள்ளன்பில்லாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே யிடைமருதீசர்க்கு மெய்யன்பர் நாரியர் பால்
வீடே யிருப்பினும் மெய்ஞான வீட்டின்பம் மேவுவரே."



"வாதுக்குச் சண்டைக்குப் போவார்;
. . வருவார் வழக்குரைப்பர்;
தீதுக் குதவியுஞ் செய்திடுவார்,
. . தினந் தேடி ஒன்றும்
மாதுக் களித்து மயங்கிடுவார்
. . விதி மாளுமட்டும்
ஏதுக்கிவர் பிறந்தார்? இறைவா!
. . கச்சி ஏகம்பனே!"


ஓயாமல் பொய் சொல்வர், நல்லோரை
. . நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம்
. . செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்;
. . தமைஅண் டினார்க்கு ஒன்று
ஈயார், இருந்தென்ன? போய் என்ன?
. . காண்! கச்சி ஏகம்பனே!


"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்நின் ஐந்தெழுத்தை
சொல்லாப் பிழையும் துதியாப்பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சி யேகம்பனே."

0 Comments:

Post a Comment



TIME