best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, January 11, 2011

சித்தர்களை ஆன்மீக புரட்சியாளர்கள் என்று
கூறுவதுண்டு.சித்தர்களின் காலம் கி.பி.14-17ம்
நூற்றாண்டின் இடைப்பட்ட காலம். அகத்தியர்,
பின்பு திருமூலர்,பிறகு மற்றவர் என சித்தர் மரபு
அறியப்படுகிறது.
ஆன்மீகம் தழைக்கவும் ,மக்களின் ஆரோக்கியம்
செழிக்கவும் சித்தர்கள்மிகவும் பாடுபட்டுள்ளனர்.
சித்தர்கள் கடவுள் நிலை பெற்றவர்கள்.
கடவுளுக்கு சமமாய் போற்றி வணங்கபட்டனர்.
சித்தர் வழிபாட்டை முதலில் கொண்டு வந்தது
சமணர்கள் தான்.பிறகே மற்றவர்களும் கைக்கொண்டனர்.

பௌத்த மதத்தின் ஒரு பிரிவான மந்திராயனத்தின்
பிறப்பிடம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீபர்வதம்.
சித்தர்கள் பலரும் ஸ்ரீபர்வதத்தோடு தொடர்பு கொண்டிருந்தனர்.
பௌத்த மத சித்தர்கள் 6-12-ம் நூற்றாண்டுகளில்
வாழ்ந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது.
தமிழ் நாட்டைப்போலவே வடநாட்டிலும்
சித்தர்கள் இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் நவநாத சித்தர்கள் எனப்படுவார்கள்.
அவர்கள்; 1.சத்திய நாதர், 2.சதோக நாதர், 3.ஆதிநாதர்,
4.வெகுளி நாதர், 5.மதங்கநாதர், 6.மச்சேந்திர நாதர்,
7.கடேந்திர நாதர், 8.அநாதி நாதர், 9.கோரக்க நாதர்.
ஆகியோர்.
சித்தர்கள் உடம்பை வளர்த்து உயிரை வளர்க்கும்
உபாயம் அறிந்தவர்கள். சாகாக்கலை அறிந்தவர்கள்.
இறைவனுடன் இரண்டறக் கலப்பதையே அவர்களின்
நோக்கமாக கருதினார்கள்.அவர்களுக்கு காணும்
இடமெல்லாம் இறைவனின் தோற்றம்.
சித்தர்கள் நிலையாக ஒரு இடத்தில் இருப்பது
கிடையாது.உலகெங்கும் யாத்திரை செய்வார்கள்.
மக்களுக்கு நன்மை செய்வதே அவர்களது பயண
நோக்கம்.அவர்களை நடமாடும் தெய்வம் எனலாம்.
நோய்,முதுமை காரணமாக இயலாமை வந்துற்ற
மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று நன்மை செய்யும்
பரந்த மனப்பான்மை உடையவர்கள்.சித்தர்கள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை.
ஓரிடத்தில் கடமை முடிந்ததாக இறைவனின்
உத்திரவு வந்தால்-வேறிடம் செல்வர்.உருமாறும்
கலை அறிந்தவர்கள் அவர்கள்.நினைத்த வடிவை
எடுத்து நினைத்த இடத்திற்கு கனப்பொழுதில்
செல்வர்.சித்தர்கள் எந்த காலத்திலும் தோன்றுவர்-
எந்த நாட்டிலும் தோன்றுவர்.இன்ன காலத்தில்
இன்ன நாட்டில் என்ற நியதிகள் இல்லை.

சித்தர்களுக்கு குளிர் இல்லை,வெயில் இல்லை,
பசி இல்லை,தூக்கம் இல்லை-தமெக்கென வாழும்
எண்ணமும் அவர்களுக்கு இல்லை.பெண்,பொருள்-மோகம்
அற்றவர்கள்.இறைவன் அருளிருந்தால்,
திடச்சிந்தனையிருந்தால், இரும்பையும்
பொன்னாக்கலாம் என்று நிரூபித்தவர்கள்-சித்தர்கள்.
அவர்கள் தங்களுடைய அருள் வல்லமையை
பெருக்கிக்கொள்ள அநேக உத்திகளை கையாளுவார்கள்.
தன்னை சோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளுதல்,
தனக்கு தானே இன்னலை எற்படுத்திக்கொண்டு தனது
ஆன்மாவை தூய்மைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற
உத்திகள் குறிப்பிடத்தகுந்தவை.

0 Comments:

Post a Comment



TIME