best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, January 15, 2011





பொலிக ! பொலிக ! பொலிக ! பொங்கல்
நலியும் நரகமும் வல்லுயிர்ச் சாபமும் போக
ஞானத்தமிழ் கொண்டு நாம் சொல்வோம்
பொலிக ! பொலிக ! பொலிக ! பொங்கல் என்றே.

அன்பே தளியாக ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியாக
நன்புருகி ஞானச் சுடர்விளக்கு ஏற்றி
ஞானத்தமிழ் கொண்டு நாம் சொல்வோம்
பொலிக ! பொலிக ! பொலிக ! பொங்கல் என்றே.

ஊரார் கூடி ஊக்கமுடன் நின் அருள்தாளிணைப் பாடி
வெய்ய கதிரோன் திருவொலி போற்றி
ஞானத்தமிழ் கொண்டு நாம் சொல்வோம்
பொலிக ! பொலிக ! பொலிக ! பொங்கல் என்றே.

சொல் தந்தருளிய ஆழ்வாரும் நாச்சியாரும் வாழ
பொருள் தந்தருளிய ஆண்டவனும் ஆதிகேசவனும் வாழ
முக்கண்ணனின் ஒரு கண்ணாம் கதிரவனும் வாழ
ஞானத்தமிழ் கொண்டு நாம் சொல்வோம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பொலிக ! பொலிக ! மானுடம் பொலிக என்றே.

அனைவருக்கும் இனிய உழவர் திருநாளாம் - தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

0 Comments:

Post a Comment



TIME