best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, January 11, 2011

சித்தர்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான
அடிப்படை நெறிகளையே எடுத்துக்கூறியுள்ளனர்.
சாத்திரக் குப்பையிலும் கோத்திரச் சண்டையிலும்
ஈடுபடாமல், மக்களை நன்னெறிப்படுத்த முயன்ற
வடநாட்டு நவநாத சித்தர்களைப் போலத் தமிழகச்
சித்தர்களும் சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி
மக்களுக்கு நல்வழி காட்டியுள்ளனர்.

சித்தர்களைப்பற்றி பலரும் பலவிதமாக
கற்பிதம் செய்து கொள்கிறார்கள்.சிலர் அவர்களை
பரதேசி என்றும்,பைத்தியக்காரர்கள் என்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.அவர்களுடைய செயல்
யாராலும் புரிந்து கொள்ள முடியாத புதிர் என்றும்,
சித்து விளையாடல் செய்யும் மந்திரக்காரர்கள் என்றும்,
சாஸ்திர சடங்குகளை எதிர்ப்பவர்கள் என்றும்,
பொது மக்களோடு இணைந்து வாழாதவர்கள்-
சுயநலவிரும்பிகள் என்றும் தவறானஅர்த்தத்தை
புரிந்து கொள்கிறார்கள். நம்மில் பலர்,சித்தர்களைப்
பற்றிய உண்மைகளை முழுதும் சரியாக புரிந்து
கொள்ளாததோடு-சில கருத்துகளை தவறாகவும் புரிந்து
வைத்துக்கொண்டுள்ளனர்.ஞானபாதையை
பிறருக்குப்புலப்படுத்தாதவர்கள் என்றும் மூலிகை
ரகஸியங்களை தமக்குள்ளேயே புதைத்து கொண்டு
விட்டவர்கள் என்றும் புரிந்து கொண்டுள்ளனர்.

தன்னுடைய சுய தேவைகளூக்காக கடவுளை
வழிபடுகிறவன்=ஓரு சாதாரண மனிதன்.

இறை சிந்தனையோடு-கடவுளை மகிழ்விப்பதற்க்காக-
பூஜை புனஸ்காரங்கள் செய்து,தன்னை மகிழ்வித்து
கொள்பவன்=ஒரு பக்தன்.

ஆனால் ஒரு சித்தனோ-சிந்தையை அடக்கி
சதா சர்வ காலமும் சிவத்திலேயே லயித்திருப்பவன்.

இயற்கை பஞ்ச பூத செயல்பாடுகளின் ரகஸியங்களை,
யதார்த்தங்களை உணர்ந்து-அவற்றின் பேதா பேதங்களை கண்டறிந்து,பேதங்களை நீக்கி குணங்களை மட்டும்
சாதனமாக கொண்டு இறையருளின் ஆனந்த நிலையை
வசப்படுத்தி,சாவை வென்று-அவன் ஜோதியில்
ஐக்கியமாயிருப்பவன்.

கடவுளைக் காண முயற்ச்சிப்பவன் பக்தன்
கண்டு தெளிந்தவன் சித்தன்.

உடம்பையும் உயிரையும் பாரமாக
கொள்வார்கள்-பக்தர்கள்.
உயிரையே சிவனாக பாவித்து-
உடம்பை போற்றுவார்கள்-சித்தர்கள்.

உடம் பார் அழியில் உயிரார் அழிவர்;
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே,
உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த் தேனே
(724)

உடம்பினை முன்னம் இழுக்கென றிருந்தேன்;
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்;
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
(725)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்;
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்;
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே;
(1823)


0 Comments:

Post a Comment



TIME